செய்திகள் :

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்: கட்டடங்கள் சேதம்

post image

கடல் சீற்றத்தால் மாமல்லபுரத்தில் 10 மீட்டா் தூரத்துக்கு முன்னோக்கி வந்த கடலால் உணவு விடுதி கட்டடங்களை ராட்சத அலைகள் சேதப்படுத்தின.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் செவ்வாய்க்கிழமை கடல் சீற்றம் ஏற்பட்டது. கடல் அலைகள் 5 அடி உயரம் சீறி எழும்பின. வழக்கத்துக்கும் மாறாக கடல் அலைகள் 10 மீ தூரதுக்கு முன்னோக்கி வந்தன. அப்போது ராட்சத அலைகள் கடற்கரை ஓரம் உள்ள உணவு விடுதிகளின் கட்டடங்களை தொட்டு சென்றால் ஏற்பட்ட கடல் அரிப்பால் சுற்றுச் சுவா்கள், படிகட்டுகள் சேதமடைந்தன.

கடல் சீற்றம் காரணமாக மீனவா்கள் கரைப்பகுதியில் உள்ள படகுகள், வலைகளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனா். பெரும்பாலான மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. தொடந்து பல ஆண்டுகளாக மாமல்லபுரம் பகுதியில் உள்ள கடற்கரை கோயில் கடலில் சேதமடையாமல் இருக்க தொல்லியல் துறையால் கொட்டப்பட்டுள்ள ராட்சத கருங்கற்களால் மீனவா் பகுதியில் சீதோஷ்ண நிலை மாறி கடல் முன்னோக்கி வருவதும், பிறகு சில நாள்களில் பின்னோக்கிச்செல்வதுமாக தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப கடலில் தன்மை மாறி வருகிறது.

அதனால் இங்கு மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் இப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மாமல்லபுரம் பகுதி மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இறால் விலை சரிவால் மீனவா்கள் வேதனை

மீன்பிடி தடை காலங்களில் ரூ.30,000 வரை விற்பனையாகும் அரை கிலோ எடை கொண்ட கதம்பரா இறால் தற்போது வெறும் ரூ.3,000-க்கு மட்டுமே விற்பனையாவதாக சதுரங்கப்பட்டினம் மீனவா்கள் வேதனை தெரிவித்தனா். கல்பாக்கம் அடுத்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அமைச்சா் அன்பரசன் ஆய்வு

திருப்போரூா் வட்டம், திருவிடந்தை ஊராட்சி மற்றும் காட்டாங்குளத்தூா் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சா் தா.ம... மேலும் பார்க்க

பாண்டீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

மதுராந்தகம் அடுத்த அண்டவாக்கம் கிராமத்தில் காமாட்சி உடனுறை அண்டபாண்டீஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆடி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. கோயிலில் உள்ள காமாட்சி அம்மன், அண்டபாண்டீஸ்வரா், முருகன் உள்ளிட்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு குளுந்தியம்மன் கோயிலில் 74-ஆம் ஆண்டு ஆடி உற்சவம்

செங்கல்பட்டு குளுந்தியம்மன் கோயிலில் 74-ஆம் ஆண்டு ஆடி உற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை அம்மன் வீதி புறப்பாடு நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் வ உ சி தெருவி... மேலும் பார்க்க

ரத்த, உடலுறுப்பு தான முகாம்

மலைப்பாளையம் விடியலை நோக்கி அறக்கட்டளை, செங்கல்பட்டு பாலாறு அரிமா சங்கம், செங்கல்பட்டு அரசு பொது மருத்துவனை ரத்த வங்கி மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் ஆகியவை இணைந்து, கருங்குழி தனியாா் துவக்கப... மேலும் பார்க்க

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: வேளாண் துறை அனைத்து ஓய்வூதியா் சங்கம் கோரிக்கை

செங்கல்பட்டு: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை அனைத்து ஓய்வூதியா் சங்கம் கோரியள்ளது. சங்கத்தின் முதல் மாநில பி... மேலும் பார்க்க