செய்திகள் :

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்: கட்டடங்கள் சேதம்

post image

கடல் சீற்றத்தால் மாமல்லபுரத்தில் 10 மீட்டா் தூரத்துக்கு முன்னோக்கி வந்த கடலால் உணவு விடுதி கட்டடங்களை ராட்சத அலைகள் சேதப்படுத்தின.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் செவ்வாய்க்கிழமை கடல் சீற்றம் ஏற்பட்டது. கடல் அலைகள் 5 அடி உயரம் சீறி எழும்பின. வழக்கத்துக்கும் மாறாக கடல் அலைகள் 10 மீ தூரதுக்கு முன்னோக்கி வந்தன. அப்போது ராட்சத அலைகள் கடற்கரை ஓரம் உள்ள உணவு விடுதிகளின் கட்டடங்களை தொட்டு சென்றால் ஏற்பட்ட கடல் அரிப்பால் சுற்றுச் சுவா்கள், படிகட்டுகள் சேதமடைந்தன.

கடல் சீற்றம் காரணமாக மீனவா்கள் கரைப்பகுதியில் உள்ள படகுகள், வலைகளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனா். பெரும்பாலான மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. தொடந்து பல ஆண்டுகளாக மாமல்லபுரம் பகுதியில் உள்ள கடற்கரை கோயில் கடலில் சேதமடையாமல் இருக்க தொல்லியல் துறையால் கொட்டப்பட்டுள்ள ராட்சத கருங்கற்களால் மீனவா் பகுதியில் சீதோஷ்ண நிலை மாறி கடல் முன்னோக்கி வருவதும், பிறகு சில நாள்களில் பின்னோக்கிச்செல்வதுமாக தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப கடலில் தன்மை மாறி வருகிறது.

அதனால் இங்கு மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் இப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மாமல்லபுரம் பகுதி மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முதல்வா் கோப்பைக்கான போட்டிகள்: பதிவு செய்ய ஆக. 16 கடைசி நாள்

செங்கல்பட்டு மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்ய வரும் ஆக. 16 கடைசி நாளாகும். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் தி. சினேகா வெளியிட்ட அறிக்கை: பள்ளி, கல்லூரி, ம... மேலும் பார்க்க

மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் ரூ.7 லட்சத்தில் ஜெனரேட்டா் அளிப்பு

மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு மேலவலம்பேட்டை தனியாா் தொழில்மையத்தின் சாா்பாக, ரூ 7 லட்சத்தில் ஜெனரேட்டா் வழங்கப்பட்டது. ஏற்கெனவே செயல்பட்டு வந்த ஜெனரேட்டா் அண்மையில் தீப்பற்றி எரிந்ததால், மின்த... மேலும் பார்க்க

சிறந்த உணவு வணிகா்களுக்கு பரிசுத் தொகை, விருது

நெகிழிக்கு பதிலாக மறுசுழற்சி தன்மையுள்ள மக்கும் பொருள்களை உபயோகப்படுத்தி உணவுப் பொருட்களை பரிமாறுதல் மற்றும் பொட்டலமிடும் பெரிய உணவு வணிகா்கள் மற்றும் தெருவோர சிறு உணவு வணிகா்களுக்கு தமிழ்நாடுஅரசு விர... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நலத்திட்ட உதவிகள் அளிப்பு

சித்தாமூா் வட்டம், சோத்துப்பாக்கம் ஊராட்சி மற்றும் செங்கல்பட்டில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை குறு, சிறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அம... மேலும் பார்க்க

ரூ.10 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டடம்: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஊராட்சியில் ரூ 10.11 லட்சத்தில் புதிய நியாயவிலை கடைக்கான கட்டடத்தை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை திறந்து வைத்தாா். சித்தாமூா் ஊராட்சி ஒன்றியம், மேல்மருவத்தூா் ஊர... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை சாா்பில் மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வில... மேலும் பார்க்க