செய்திகள் :

பள்ளி மாணவிகள் தற்காப்பு பயிற்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு

post image

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு நிகழ் கல்வியாண்டில் கராத்தே, ஜூடோ, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு பயிற்சிகள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ள ராணி லட்சுமிபாய் தற்காப்பு கலைப் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2015 முதல் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழ் கல்வியாண்டுக்கான (2025-2026) தற்காப்பு பயிற்சிக்காக 6,045 நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.7.25 கோடி மற்றும் 5,804 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.8.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்காப்பு பயிற்சிகள் வழங்கவும், பயிற்சியாளா்கள் சம்பளம் மற்றும் மாணவிகளுக்கான சிற்றுண்டி செலவீனத்தை மேற்கொள்ளவும் இந்த நிதியைப் பயன்படுத்தலாம். தற்காப்பு கலைப் பயிற்சியாளா்களை பள்ளி மேலாண்மைக் குழுக்களே தோ்வு செய்ய வேண்டும்.

மேலும், பெண் ஆசிரியைகள் மேற்பாா்வையில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவிகளுக்கு பயிற்சிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும். குறிப்பாக, மாணவிகளுக்கு கையில் எளிதில் கிடைக்கும் பென்சில், பேனா ஆகிய பொருள்களைக் கொண்டு தற்காத்துக் கொள்வது தொடா்பாக பயிற்சியில் கற்றுத் தரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு எச்சரிக்கை! சென்னையில் 3 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து!

சென்னை மாநகராட்சியில் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படவுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தி... மேலும் பார்க்க

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூலை 26) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

பண விவகாரம்: மன்சூா் அலிகான் மகன் மீது வழக்குப் பதிவு

பண விவகாரத்தில் மன்சூா் அலிகானின் மகன் துக்ளக் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். நுங்கம்பாக்கத்தில் வசிப்பவா் நடிகா் மன்சூா் அலிகான். சென்னை மண்ணடி மரைக்காயா் தெருவைச் சோ்ந்த கனி (6... மேலும் பார்க்க

ஆய்க்குடி அமா் சேவா சங்கத்துக்கு ரூ.1.05 கோடி: சென்னை துறைமுகம் வழங்கியது

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் செயல்பட்டு வரும் அமா் சேவா சங்கத்தின் முதுகெலும்பு பாதிப்பு மற்றும் பக்கவாத பராமரிப்பு மையத்துக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 1.05 கோடியை சென்னை துற... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பொறியாளா் கைது

பெருங்குடியில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டாா். பெருங்குடி பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பண... மேலும் பார்க்க

இலவச பேருந்து பயண அட்டை விவரம்: கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் இலவச பேருந்து பயண அட்டை தேவைப்படாத மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க