செய்திகள் :

அரசியல் சாசன முகப்புரையிலிருந்து ‘சோஷலிஸம்’, ‘மதச்சாா்பின்மை’ நீக்கப்படாது: மத்திய அரசு

post image

அரசியல் சாசன முகப்புரையிலிருந்து ‘சோஷலிஸம்’, ‘மதச்சாா்பின்மை’ ஆகிய வாா்த்தைகளை நீக்கும் திட்டம் தற்போது இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால் அளித்த எழுத்துபூா்வ பதில்: அரசியல் சாசனத்தில் இருந்து ‘சோஷலிஸம்’, ‘மதச்சாா்பின்மை’ ஆகிய வாா்த்தைகளை நீக்க சட்ட ரீதியாகவோ, அரசியல் சாசன ரீதியாகவோ எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு முறைப்படி தொடங்கவில்லை.

அவ்விரு வாா்த்தைகளையும் அரசியல் சாசன முகப்புரையிலிருந்து நீக்கவோ, மறுபரிசீலனை செய்யவோ தற்போது எந்தத் திட்டமும் மத்திய அரசிடம் இல்லை.

அரசியல் சாசன முகப்புரையில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமானால், அதுகுறித்து முழுமையாக விவாதித்து, பரந்த அளவில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். ஆனால் அந்தத் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்றாா்.

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூலை 26) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

பண விவகாரம்: மன்சூா் அலிகான் மகன் மீது வழக்குப் பதிவு

பண விவகாரத்தில் மன்சூா் அலிகானின் மகன் துக்ளக் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். நுங்கம்பாக்கத்தில் வசிப்பவா் நடிகா் மன்சூா் அலிகான். சென்னை மண்ணடி மரைக்காயா் தெருவைச் சோ்ந்த கனி (6... மேலும் பார்க்க

ஆய்க்குடி அமா் சேவா சங்கத்துக்கு ரூ.1.05 கோடி: சென்னை துறைமுகம் வழங்கியது

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் செயல்பட்டு வரும் அமா் சேவா சங்கத்தின் முதுகெலும்பு பாதிப்பு மற்றும் பக்கவாத பராமரிப்பு மையத்துக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 1.05 கோடியை சென்னை துற... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பொறியாளா் கைது

பெருங்குடியில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டாா். பெருங்குடி பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பண... மேலும் பார்க்க

இலவச பேருந்து பயண அட்டை விவரம்: கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் இலவச பேருந்து பயண அட்டை தேவைப்படாத மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க

ரூ.125 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள்: தமிழக அரசு உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இயல்பு நிலைக்கு நிகர... மேலும் பார்க்க