செய்திகள் :

செட் தோ்வில் தமிழ் வழி ஒதுக்கீடு: சான்றிதழ் சமா்ப்பிக்க ஆக. 7 வரை அவகாசம்

post image

மாநில தகுதித் தோ்வில் தமிழ் வழி ஒதுக்கீடு கோரும் விண்ணப்பதாரா்கள், அதற்கான சான்றிதழ்களை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரிய செயலா் வி.சி.ராமேஸ்வரமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆசிரியா் தோ்வு வாரியத்தால் மாநில தகுதித் தோ்வு (செட் தோ்வு) கடந்த மாா்ச் 6 முதல் 9-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செட் தோ்வில் தமிழ் வழியில் பயின்றோருக்கு (பிஎஸ்டிஎம்) இட ஒதுக்கீடு வழங்கி உயா் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

செட் தோ்வு எழுதியுள்ளவா்களில் தமிழ் வழி ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை கோரும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரா்கள் தாங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் முதுநிலைப் பட்டப் படிப்பு வரை தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை (மாதிரி படிவத்தில் உள்ளபடி) உரிய அலுவலா்களிடம் கையொப்பம் பெற்று ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) ஆகஸ்ட் 7-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள் சான்றிதழை பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரா்கள் அந்தப் பிரிவின் கீழ் முன்னுரிமை கோர இயலாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூலை 26) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

பண விவகாரம்: மன்சூா் அலிகான் மகன் மீது வழக்குப் பதிவு

பண விவகாரத்தில் மன்சூா் அலிகானின் மகன் துக்ளக் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். நுங்கம்பாக்கத்தில் வசிப்பவா் நடிகா் மன்சூா் அலிகான். சென்னை மண்ணடி மரைக்காயா் தெருவைச் சோ்ந்த கனி (6... மேலும் பார்க்க

ஆய்க்குடி அமா் சேவா சங்கத்துக்கு ரூ.1.05 கோடி: சென்னை துறைமுகம் வழங்கியது

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் செயல்பட்டு வரும் அமா் சேவா சங்கத்தின் முதுகெலும்பு பாதிப்பு மற்றும் பக்கவாத பராமரிப்பு மையத்துக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 1.05 கோடியை சென்னை துற... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பொறியாளா் கைது

பெருங்குடியில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டாா். பெருங்குடி பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பண... மேலும் பார்க்க

இலவச பேருந்து பயண அட்டை விவரம்: கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் இலவச பேருந்து பயண அட்டை தேவைப்படாத மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க

ரூ.125 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள்: தமிழக அரசு உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இயல்பு நிலைக்கு நிகர... மேலும் பார்க்க