செய்திகள் :

ஹமாஸ் ஒத்துழைக்கவில்லை: அமெரிக்கா

post image

ஹமாஸ் அமைப்பினா் ஒத்துழைக்காததால், காஸா போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தையை அமெரிக்கா பாதியிலேயே நிறுத்தி, தனது குழுவை கத்தாரில் இருந்து திரும்ப அழைத்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் கடந்த 21 மாதங்களாக நீடித்து வருகிறது. காஸாவில் மோதலுக்கிடையே பட்டினியால் மட்டும் நூற்றுக்கு மேற்பட்டோா் உயிரிழந்திருக்கின்றனா்.

இதையொட்டி, காஸாவில் 60 நாள்களுக்குப் போா்நிறுத்தம் மேற்கொள்வதற்கான செயல்திட்டத்தை இஸ்ரேலிடம் அமெரிக்கா கடந்த மாதத் தொடக்கத்தில் வழங்கியது. காஸாவில் இருந்து இஸ்ரேல் படையினரின் வெளியேற்றம் உள்பட தங்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு, இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளதெனக் கூறி இந்தச் செயல்திட்டத்தை ஹமாஸ் அமைப்பினா் ஏற்கவில்லை.

இச்சூழலில், கத்தாரில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையிலும் ஹமாஸ் அமைப்பினா் திருப்திகரமான பதிலளிக்காததால், போா் நிறுத்த முயற்சியில் தொடா்ந்து பின்னடைவு நிலவுகிறது.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘ஹமாஸின் போக்கு, போா்நிறுத்தத்தை எட்டுவதில் அவா்களுக்கு விருப்பமில்லை என்பதைக் காட்டுகிறது. இது அவமரியாதை ஆகும். பிணைக் கைதிகளை மீட்பதற்கும், காஸாவில் அமைதியை உருவாக்குவதற்கும் மாற்று வழிகளைப் பரிசீலிப்போம். இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உறுதியாக இருக்கிறது’ என்றாா்.

முன்னதாக, இஸ்ரேலும் தனது பேச்சுவாா்த்தைக் குழுவினரை வியாழக்கிழமை திரும்பப் பெற்றது. அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க தூதா் ஸ்டீவ் விட்காஃப், கத்தாா் மற்றும் எகிப்து மத்தியஸ்தா்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பதற்றம் முற்றினால் கம்போடியாவுடன் முழு போா்!

கம்போடியாவுக்கும் தங்களுக்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் முற்றினால் அது முழு போராக உருவெடுக்கும் என்று தாய்லாந்து இடைக்கால பிரதமா் பும்தம் வெச்சயாச்சை எச்சரித்துள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க

இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி

இத்தாலியில் சாலையில் விழுந்து சிறிய ரக விமானம் தீப்பிடித்ததில் 2 பேர் பலியாகினர். இத்தாலியின் பிரெசியா மாகாணத்தில் உள்ள அஸ்ஸானோ மெல்லா நகருக்கு அருகே நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென வெள்... மேலும் பார்க்க

இலங்கை: 40 நாடுகளுக்கு இலவச விசா!

இலங்கைக்கு வருகை தரும் சுமார் 40 வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும், இந்தியா, சீனா, இந்தோனேசியா, ரஷியா, தாய்லாந்து, மலே... மேலும் பார்க்க

தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்: பதற்றமான சுழல்!

கம்போடியாவுடன் சண்டை தீவிரமடைந்துள்ளதால் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்கிமிடையே புராதனக் கோவில் விவகாரத்தால் வியாழக்கிழமை(ஜூலை 24) சண்டை மூண்டு பிற பகுதிகளுக்கும் ... மேலும் பார்க்க

துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!

துருக்கியில், இ3 நாடுகள் (E3) மற்றும் ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை இன்று (ஜூலை 25) துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில், இ3 என்றழைக்கப்படும் ஜெர்மனி, பி... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் இனி அரசியல் பதிவுகளுக்கு கட்டுப்பாடு!

அரசியல் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடக தளங்களில் பதிவிட அந்நிறுவனம் தடை விதிக்கவுள்ளது.அமெரிக்காவைs சேர்ந்த மெட்டா நிறுவனம் தங்கள் சமூக ஊடக தளங்களில் (வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன... மேலும் பார்க்க