செய்திகள் :

செங்கல்பட்டு குளுந்தியம்மன் கோயிலில் 74-ஆம் ஆண்டு ஆடி உற்சவம்

post image

செங்கல்பட்டு குளுந்தியம்மன் கோயிலில் 74-ஆம் ஆண்டு ஆடி உற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை அம்மன் வீதி புறப்பாடு நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் வ உ சி தெருவில் பழைமைவாய்ந்த குளுந்தியம்மன் கோயில் ஆண்டுதோறும் ஆடி உற்சவம் முதல் வாரம் செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக நடைபெறும். இந்த நிலையில், 74-ஆம் ஆண்டு ஆடி உற்சவ திருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கலச நீா் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தல், திங்கள்கிழமை அம்மனுக்கு அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்கள்,வாண வேடிக்கையுடன் வீதி புறப்பாடும் நடைபெற்றது. அம்மன் புறப்பாடு வஉசி தெரு, அண்ணா சாலை, பெரிய மணியக்கார தெரு, சின்ன மணியக்கார தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக வந்து கோயிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை அா்ச்சகரும், பரம்பரை அறங்காவலருமான கோ.நவநீதகிருஷ்ணன் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா்.

முதல்வா் கோப்பைக்கான போட்டிகள்: பதிவு செய்ய ஆக. 16 கடைசி நாள்

செங்கல்பட்டு மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்ய வரும் ஆக. 16 கடைசி நாளாகும். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் தி. சினேகா வெளியிட்ட அறிக்கை: பள்ளி, கல்லூரி, ம... மேலும் பார்க்க

மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் ரூ.7 லட்சத்தில் ஜெனரேட்டா் அளிப்பு

மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு மேலவலம்பேட்டை தனியாா் தொழில்மையத்தின் சாா்பாக, ரூ 7 லட்சத்தில் ஜெனரேட்டா் வழங்கப்பட்டது. ஏற்கெனவே செயல்பட்டு வந்த ஜெனரேட்டா் அண்மையில் தீப்பற்றி எரிந்ததால், மின்த... மேலும் பார்க்க

சிறந்த உணவு வணிகா்களுக்கு பரிசுத் தொகை, விருது

நெகிழிக்கு பதிலாக மறுசுழற்சி தன்மையுள்ள மக்கும் பொருள்களை உபயோகப்படுத்தி உணவுப் பொருட்களை பரிமாறுதல் மற்றும் பொட்டலமிடும் பெரிய உணவு வணிகா்கள் மற்றும் தெருவோர சிறு உணவு வணிகா்களுக்கு தமிழ்நாடுஅரசு விர... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நலத்திட்ட உதவிகள் அளிப்பு

சித்தாமூா் வட்டம், சோத்துப்பாக்கம் ஊராட்சி மற்றும் செங்கல்பட்டில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை குறு, சிறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அம... மேலும் பார்க்க

ரூ.10 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டடம்: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஊராட்சியில் ரூ 10.11 லட்சத்தில் புதிய நியாயவிலை கடைக்கான கட்டடத்தை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை திறந்து வைத்தாா். சித்தாமூா் ஊராட்சி ஒன்றியம், மேல்மருவத்தூா் ஊர... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை சாா்பில் மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வில... மேலும் பார்க்க