செய்திகள் :

மதுரை ஆதீனத்தின் முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி முறையீடு!

post image

மதுரை ஆதீனத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் தாக்கல் செய்திருக்கும் மனுவை நீதிபதி நிர்மல் குமார் விசாரிக்கவுள்ளார்.

கடந்த மே 2-ஆம் தேதி மதுரை ஆதீனத்தின் காா் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டை அருகே விபத்துக்குள்ளானது. ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தன்னைக் கொல்ல முயற்சித்ததாக மதுரை ஆதீனம் தெரிவித்த கருத்துகள் சா்ச்சையானது.

மதுரை ஆதீனத்தின் பேச்சு இரு மதத்தினா் இடையே மோதலைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜேந்திரன், இணையக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், மதுரை ஆதீனத்துக்கு எதிராக 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக மதுரை ஆதீனத்துக்கு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதனிடையே, சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் மதுரை ஆதீனத்துக்கு முன்ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த வழக்கு தொடர்பாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகேயுள்ள மடத்தில் வைத்து மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A petition has been filed in the Madras High Court on behalf of the police seeking cancellation of the anticipatory bail granted to Madurai Atheenam.

இதையும் படிக்க : புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.75 ஆயிரத்தை கடந்து விற்பனை!

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ... மேலும் பார்க்க

தீபாவளிக்கு புடவை: ஜெயலலிதா வழியில் இபிஎஸ்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தீபாவளிக்கு, பெண்களுக்கு நல்ல புடவை வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சையில் இன்று விவசாய... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்ட அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உடல்நிலையில் ம... மேலும் பார்க்க

தூத்துக்குடி விமான நிலையம்; ரூ.4,500 கோடி திட்டங்களை துவக்கி வைக்கும் மோடி - நயினார் நாகேந்திரன்

திருச்சி: தூத்துக்குடி புதிய விமான நிலைய துவக்க விழாவில் 4500 கோடி ரூபாய் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.தமிழக முதல்வர் எனக்கு நெருங்கிய நண்பர் - என் தொகுதி மக்கள் கோரிக்கைகளை செய்து கொடுத்... மேலும் பார்க்க

இளையராஜா தொடர்ந்த வழக்கில் சோனி மியூசிக் நிறுவனத்தைச் சேர்க்க உத்தரவு!

சென்னை: உரிய அனுமதியின்றி மிஸஸ் & மிஸ்டர் திரைப்படத்தில் 'ராத்திரி சிவ ராத்திரி' பாடல் பயன்படுத்தியதை எதிர்த்து இளையராஜா தொடர்ந்த வழக்கில் சோனி மியூசிக் நிறுவனத்தைச் சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் ... மேலும் பார்க்க

எந்த அளவுக்குக் குடிக்கலாம்.. மதுபாட்டிலில் குறிப்பிடக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை: எந்த அளவுக்கு மது குடிக்கலாம் என்பதை மதுபாட்டிகளில் குறிப்பிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.மது பாட்டில்களில் மது அருந்துதல் உடல் நலனுக்கு தீங்கு என குறிப்... மேலும் பார்க்க