செய்திகள் :

கோவை: பேரூர் கோயிலில் ஆகம விதிகளை மீறி விஐபி தரிசனம் - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாண்டியராஜன்!

post image

சென்னை கொளத்தூர் காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்தவர் பாண்டியராஜன். அண்மையில் திருமலா பால் நிறுவனம் ஊழியர் தற்கொலை வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டில் பாண்டியராஜன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

அவர் சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை என்று பணியாற்றிய பெரும்பாலான பகுதிகளில் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பாண்டியராஜன்

சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக்கு எதிராக போராடிய பெண்ணை கன்னத்தில் அறைந்தது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டது என்று பாண்டியராஜனின் சர்ச்சை பட்டியல் மிகவும் நீளமானது.

பாண்டியராஜன் ஏற்கெனவே கடந்த 2019-ம் ஆண்டும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தார். பணியில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட பயணங்களிலும் சர்ச்சையில் சிக்க தொடங்கியுள்ளார். பாண்டியராஜன் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் சென்றுள்ளார்.

பாண்டியராஜன் விஐபி தரிசனம்

இரவு நடை சாத்தப்பட்ட நிலையில், ஆகம விதிகளை மீறி பாண்டியராஜனுக்கு விஐபி தரிசனம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பக்தர்கள் எடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பக்தர்கள் பாண்டியராஜன் மற்றும் கோயில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“முதலமைச்சராக இருந்தாலும் ஆகம விதிகளை மீறக் கூடாது. உங்களுக்கு உள்ளே செல்ல யார் அனுமதி கொடுத்தனர்.” என்று பக்தர் ஒருவர் பாண்டியராஜனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பாண்டியராஜன் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “உங்கள் வேலையை பாருங்கள்.” என்று மட்டும் கூறினார்.

பாண்டியராஜன்

இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாண்டியராஜன் மற்றும் அவருக்கு விஐபி தரிசனத்துக்கு அனுமதி வழங்கிய பேரூர் பட்டீஸ்வரர் கோயில் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க பக்தர்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``ஆதாரும், ரேஷன் கார்டும் இந்திய குடிமகன் என்பதற்கான சான்றுகள் அல்ல'' - தேர்தல் ஆணையம் பதில்!

பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று வரும் நிலையில், "ஆதார் அட்டை அல்லது ரேஷன் கார்டு ஆகிய இரண்டு ஆவணங்களையும் வாக்காளர் தகுதிக்கான சான்றுகளாக கருத முடியாது" என உச்ச நீதிமன்றத... மேலும் பார்க்க

"குரூப் 4 தேர்வில் எந்தக் குளறுபடியும் நடக்கவில்லை; 3 மாதங்களில்..." - TNPSC விளக்கம்!

சமீபத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்துவிட்டு உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்... மேலும் பார்க்க

Pawan: பவன் கல்யாண் படத்தின் பிரீமியர் ஷோவிற்கு அனுமதி; கூட்ட நெரிசல் ஆபத்து; வெடிக்கும் சர்ச்சைகள்!

தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவராக இருந்த பவன் கல்யாண், அரசியலில் காலடி எடுத்து வைத்து தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.சினிமாவில் இருந்து ஓய்வு பெறாமல் துண... மேலும் பார்க்க

ஏமன் கொலை வழக்கு: நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்தா? - வெளியாகும் தகவலின் பின்னணி என்ன?

ஏமன் நாட்டைச் சேர்ந்த மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் அந்நாட்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி மரண தண்டனைக்குள்ளான கேரள நர்ஸ் நிமிஷா பிரியா, ஜூலை 16-ம் தேதி தூக்கிலிடப்படுவதாக இருந்தது.மத்திய அரசு தரப்பிலிருந... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: "நானும் கலெக்டர் ஆவேன்" - கனவைச் சொன்ன சிறுமி; நெகிழ வைத்த கலெக்டர்; என்ன நடந்தது?

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மணியம்பட்டி மலைக் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி திஷியா(8). இவர், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறோம்.பெற்றோரை இழந்த நிலையில்,... மேலும் பார்க்க

விருதுநகர்: ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகள்; தற்காலிகமாக மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் கீழ் 680 பட்டாசுத் தொழிற்சாலைகள், மாவட்ட வருவாய் அலுவலர் பிரிவின் கீழ் 400 பட்டாசு ஆலைகள் என மொத்தம் 1080 பட்டாசு... மேலும் பார்க்க