செய்திகள் :

Nagam App: வீட்டிற்குள் நுழையும் பாம்புகளைப் பிடிக்க தமிழக அரசின் செயலி; பயன்படுத்துவது எப்படி?

post image

தமிழ்நாடு மாநில வனவிலங்கு ஆணையம், பாம்புகளைப் பாதுகாப்பாக மீட்கவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் "நாகம்" என்ற பெயரில் புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தச் செயலி, மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல் பாம்புகளை இயற்கையான வாழிடங்களுக்கு மாற்றுவதற்கு உதவுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

செயலியின் முக்கிய அம்சங்கள்

"நாகம்" செயலி, பயனர்களுக்கு எளிமையான மற்றும் பயனுள்ள அம்சங்களை வழங்குகிறது

பொதுமக்கள் தங்கள் பகுதியில் பாம்புகளைக் கண்டால், செயலி மூலம் உடனடியாக வனவிலங்கு அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பலாம். இதற்கு பாம்பின் புகைப்படம், இருப்பிடம் மற்றும் கண்டறியப்பட்ட நேரம் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும்.

பாம்பு
பாம்பு

இந்தச் செயலியில் தமிழ்நாட்டில் காணப்படும் பல்வேறு பாம்பு இனங்கள் பற்றிய விவரங்கள், புகைப்படங்கள் மற்றும் அவற்றின் பண்புகள் பற்றிய தகவல்கள் உள்ளன. இது பயனர்களுக்கு பாம்பு விஷமுள்ளதா? இல்லையா? என்பதை அறிய உதவுகிறது.

பாம்புக் கடி ஏற்பட்டால், உடனடியாகச் செய்ய வேண்டிய முதலுதவி முறைகள் பற்றிய விரிவான வழிகாட்டுதல்களும் இந்தச் செயலியில் உள்ளன.

பயனரின் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள மருத்துவமனைகளின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள் இந்தச் செயலியில் கிடைக்கின்றன.

பாம்புகள் பதுங்கும் இடங்கள், அவற்றை எவ்வாறு தவிர்ப்பது, மற்றும் பாம்புகளைக் கொல்லாமல் பாதுகாப்பது குறித்த தகவல்கள் இந்தச் செயலியில் வழங்கப்பட்டுள்ளன.

பாம்புகள் இயற்கை சூழலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், பொதுமக்களிடையே பாம்புகள் குறித்த அச்சமும், தவறான புரிதல்களும் நிலவுகின்றன.

'நாகம்' செயலி மூலம், பாம்புகளைப் பாதுகாப்பாக மீட்பதோடு, மக்களுக்கு அவை குறித்துச் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்வதாக வனவிலங்கு அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

பாம்புகளைக் கொல்வதற்குப் பதிலாக, அவற்றை இயற்கையான வாழிடங்களுக்கு மாற்றுவதற்கு இந்தச் செயலி உதவியாக இருக்கும் என்று நம்புகின்றனர்.

"நாகம்" செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. இது தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பயன்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செயலியைப் பயன்படுத்த, பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்திப் பதிவு செய்ய வேண்டும், பின்னர் அவர்களது இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு தகவல்களைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கூட்டமாக வந்த கதண்டு வண்டுகள் கடித்ததில் தம்பதியினர் உயிரிழப்பு - தென்காசியில் சோகம்

தென்காசியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் சீவநல்லூர் என்ற கிராமத்தில் நேற்று ஐயப்பன் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கோயிலில் ஐயப்பனை வழிபட்டு விட்டு, அ... மேலும் பார்க்க

Salmon: ஒரு மீனின் பயணத்தில் இத்தனை எதிரிகளா? இது சாலமன்களின் கதை!

உலகில் எத்தனையோ வகை மீன்கள் இருந்தாலும், சாலமனுக்கு தனிச்சிறப்பு உண்டு. நன்னீரில் பிறந்து, கடல் நீரில் வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்ய மறுபடியும் தான் பிறந்த நன்னீர் நிலைக்கே திரும்பி வருபவை சாலமன். இது... மேலும் பார்க்க

Tiger Cub: எரிவாயு தொட்டிக்குள் மாட்டிக்கொண்ட 6 மாத புலிக் குட்டி; மீட்கப்பட்ட பின்னணி என்ன?

கர்நாடக மாநிலம் பிடகளு கிராமத்தில் நவீன் என்பவருக்குச் சொந்தமான உயிரி எரிவாயு நிலையம் இருக்கிறது. அந்த வளாகத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் எரிவாயு தொட்டிக்குள்ளிருந்து நேற்று திடீரென வித்தியாசமா... மேலும் பார்க்க

"King Cobra-வின் உண்மையான நீளம் என்ன?" - வனத்துறை அதிகாரி வெளியிட்ட வீடியோ வைரல்!

ஒரு இளைஞர் தனது வெறும் கைகளால் ராட்சத கிங் கோப்ரா பாம்பைத் தைரியமாகப் பிடித்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பக... மேலும் பார்க்க

Kaziranga: தாயை பிரிந்து சாலையில் பரிதவித்த குட்டி யானை; கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை செய்த மேஜிக்!

பாட்டி யானை என்றழைக்கப்படும் மூத்த பெண் யானைகள் மூலமே ஒவ்வொரு யானை குடும்பமும் வழிநடத்தப்படுவதுடன், மத யானைகள் நீங்கலாக குட்டிகளுடன் மொத்த குடும்பத்தையும் பாட்டி யானைகளே வலசை அழைத்துச் சென்று பாதுகாப்... மேலும் பார்க்க

Birds: அழிவின் விளிம்பில் 500 பறவை இனங்கள்; ஆராய்ச்சியில் அதிர்ச்சி முடிவுகள்; காரணம் என்ன?

காலநிலை மாற்றம் மற்றும் வாழ்விட இழப்பு போன்ற காரணங்களால் அடுத்த நூற்றாண்டுக்குள் 500-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அழிவின் விளிம்பில் தள்ளப்படும் என்று இங்கிலாந்து நாட்டின் ரீடிங் பல்கலைக்கழக (Universi... மேலும் பார்க்க