செய்திகள் :

சீனாவில் பெய்த கனமழையால் நேபாளத்தில் மீண்டும் வெள்ளம்!

post image

சீனாவில் பெய்த கனமழையால், நேபாள நாட்டின் போடேகோஷி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, ரசுவா மாவட்டத்தில் 16 கி.மீ. சாலை முடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரசுவா மாவட்டத்தின், போடேகோஷி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, சயாப்ருபேசி - ரசுவாகாதி சாலையில் வெள்ள சூழ்ந்து16 கி.மீ. தூரம் முடங்கியுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை 8 ஆம் தேதியன்று, சயாப்ரூபேசி முதல் ரசுவாகாதி வரை செல்லக்கூடிய சாலையில், வெள்ளம் ஏற்பட்டு சுமார் 1 கி.மீ. நீளமுடைய சாலைப் பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, முடக்கப்பட்டிருந்த சாலையில், கடந்த ஜூலை 20 ஆம் தேதி முதல் ஒருவழிப் பாதை மட்டும் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அங்கு மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அந்தச் சாலை மீண்டும் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தில், கோசைகுண்டா கிராமத்தின் 2 மற்றும் 3 ஆம் வார்டு பகுதிகளில் அமைந்திருந்த சாலைப் பகுதிகள் வெள்ளத்தில் பலத்த சேதமடைந்து அடித்துச் செல்லபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பொடேகோஷி, திரிசூலி, லாங்டாங் மற்றும் சிலிமே ஆகிய ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ளதாக ரசுவா மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த, ஜூலை 8 ஆம் தேதி, நேபாள - சீனா எல்லையில் அமைந்திருந்த எல்லைப் பாலமானது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:இந்தியா மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு: அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? -மத்திய அரசு விளக்கம்

Heavy rains in China have caused flooding in Nepal's Podekoshi River, blocking a 16-km road in Rasua district, it is reported.

உக்ரைனில் தொடரும் ரஷியாவின் தாக்குதலில் 8 பேர் பலி! 10 குழந்தைகள் உள்பட 82 பேர் படுகாயம்!

உக்ரைன் தலைநகர் கீவ் மீது நள்ளிரவில் ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில், 6 வயது சிறுவன் உள்பட 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கீவ் நகரத்தின் மீது நேற்று (ஜூலை 30) நள்ளி... மேலும் பார்க்க

சீன தலைநகரில் கடும் வெள்ளம்: 80,000 பேர் வெளியேற்றம்! இருளில் மூழ்கிய 136 கிராமங்கள்!

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகப் பெய்து வரும் கனமழையால், 44 பேர் பலியானதுடன், 9 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் மாகாணத்தில், கடந்த வாரம் முதல் பெய்த... மேலும் பார்க்க

வெள்ளத்தில் மிதக்கும் பெய்ஜிங்: 44 பேர் பலி!

சீன தலைநகர் பெய்ஜிங்கில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. 9 பேர் காணாமல் போயுள்ளனர். பெய்ஜிங்கில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அப்பகுதி முழுவதும் வெள்... மேலும் பார்க்க

3.6 கோடி சொத்துக்காக சண்டையிட்ட பிள்ளைகள்! கடைசியாக தெரிய வந்த உண்மை!!

சீனாவில், தந்தைக்குச் சொந்தமான ரூ.3.6 கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கு அண்ணன், தங்களை சண்டையிட்டுக் கொண்ட நிலையில், இருவருமே தத்துப் பிள்ளைகள் என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர்.சீனாவின் தியான்ஜின் நகரைச... மேலும் பார்க்க

வீழ்ச்சியடைந்த பொருளாதார நாடு இந்தியா: டிரம்ப் கடும் விமர்சனம்

புது தில்லி: வீழ்ச்சியடைந்த பொருளாதார நாடு என்று இந்தியாவை கடுமையாக விமர்சித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாத நிலையில், இந்தி... மேலும் பார்க்க

இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே மிகப் பயங்கர நிலநடுக்கம் எது? ஏன்?

ரஷியாவுக்கு அருகே கடல் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து அமெரிக்காவின் ஹவாய் தீவு உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி அலைகள் வீசின.ரஷியாவின் கிழக்குத் தொலைதூரப் பகுதியில் அமைந... மேலும் பார்க்க