செய்திகள் :

வீழ்ச்சியடைந்த பொருளாதார நாடு இந்தியா: டிரம்ப் கடும் விமர்சனம்

post image

புது தில்லி: வீழ்ச்சியடைந்த பொருளாதார நாடு என்று இந்தியாவை கடுமையாக விமர்சித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாத நிலையில், இந்திய பொருள்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், ரஷியாவுடன் இணைந்து வர்த்தகம் மேற்கொள்வதற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்திருந்தார்.

இந்தியாவுக்கான வரி விதிப்பு முறை ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று தன்னுடைய ட்ரூத் எனப்படும் சமூக வலைத்தளத்தில், டொனாலட் டிரம்ப் இந்தியா - ரஷியா குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

அதில், ரஷியாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் அதுபற்றி எனக்குக் கவலையில்லை. இந்தியா, ரஷியாவுடன் சேர்ந்து வர்த்தகம் செய்தால் வீழ்ந்து கிடக்கும் அவர்களது பொருளாதாரம் மேலும் வீழத்தான் செய்யும்.

வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை இந்தியா, ரஷியா மேலும் வீழ்ச்சிக்குக் கொண்டு செல்கிறார்கள். நாங்கள் இந்தியாவுடன் இணைந்து மிகக் குறைவான வணிகத்தையே மேற்கொள்கிறோம். அவர்களது கட்டணம் மிக அதிகம். இந்த உலகிலேயே, பிற நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் கட்டணம் அதிகம். அதுபோல, ரஷியாவும் அமெரிக்காவும் இணைந்து வணிகம் மேற்கொள்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பதிவிட்டிருப்பதாவது, அந்த வகையிலேயே அதை அப்படியே விட்டுவிடுவோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக, ரஷிய முன்னாள் அதிபர் மெத்வேதேவ் பேசுகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷியாவுடன் விளையாடுகிறார். இதுபோன்ற நடவடிக்கைகள் ரஷியா - அமெரிக்கா இடையே போரைத்தான் ஏற்படுத்தும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் அனைத்துக்கும் 25 சதவீத வரி விதிப்பு ஆகஸ்ட் ஒன்று முதல் நடைமுறைக்கு வரும் என்றும், அளவு குறிப்பிடப்படாத அபராதமும் விதிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார் டிரம்ப்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை ஐந்தாம் கட்டத்தை எட்டியிருக்கிறது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க அதிகாரிகள் இந்த மாதம் நான்காவது வாரத்தில் இந்தியா வரவிருக்கிறார்கள். மிக மோசமான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதை விட, 25 சதவீத வரி விதிப்பே மேலானது என இந்தியா அதிகாரிகள் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: கனடாவும் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.ஏற்கெனவே, இஸ்ரேல், அமெரிக்காவின் எதிா்ப்பையும் மீறி பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்போவதாக பிரான்ஸும், தங்களின் சில நிபந்தனை... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ் அதிபா் ஆக.4-இல் இந்தியா வருகை

பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்டினண்ட் ஆா்.மாா்கோஸ் ஜூனியா், ஆகஸ்ட் 4 முதல் 8 வரை அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறாா்.இந்தப் பயணத்தின்போது குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்திக்கும் அவா், பிரதமா் நரேந்... மேலும் பார்க்க

ஈரானுடன் வா்த்தகம்: 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானுடன் வா்த்தகம் மேற்கொண்டுவரும் இந்தியாவைச் சோ்ந்த 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந் நாடு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.காஞ்சன் பாலிமா்ஸ், அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ரா... மேலும் பார்க்க

அமெரிக்கா-பாகிஸ்தான் வா்த்தக ஒப்பந்தம் இறுதி : டிரம்ப் அறிவிப்பு

‘பாகிஸ்தானுடன் அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இதன்படி, அந்நாட்டில் எண்ணெய் வளங்கள் மேம்படுத்தப்பட உள்ளன’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.மேலும், ‘இந்தியாவுக்கு பாக... மேலும் பார்க்க

அவசரநிலை வாபஸ்: மியான்மா் ராணுவம் அறிவிப்பு

மியான்மரில் நான்கரை ஆண்டுகளுக்கு முன்னா் ஆட்சியைக் கைப்பற்றியபோது அறிவித்திருந்த அவசரநிலையை திரும்பப் பெறுவதாக அந்த நாட்டு ராணுவம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில... மேலும் பார்க்க

சீன மழை வெள்ளம்: 44 போ் உயிரிழப்பு

சீனாவில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 44 போ் உயிரிழந்துள்ளனா்; ஒன்பது போ் மாயமாகியுள்ளனா் என்று அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிற... மேலும் பார்க்க