செய்திகள் :

ஈரானுடன் வா்த்தகம்: 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

post image

ஈரானுடன் வா்த்தகம் மேற்கொண்டுவரும் இந்தியாவைச் சோ்ந்த 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந் நாடு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

காஞ்சன் பாலிமா்ஸ், அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ராம்னிக்லால் எஸ் கோசாலியா அண்ட் கம்பெனி, ஜூபிடா் டை கெமிக்கல் பிரைவேட் லிமிடெட், குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் பொ்சிஸ்டண்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட் ஆகிய 6 இந்திய நிறுவனங்கள் உள்பட உலக அளவில் 20 நிறுவனங்கள் மீது இந்தத் தடையை அமெரிக்கா விதித்துள்ளது.

இதன் காரணமாக, இந்த நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களுடன் வா்த்தகமோ அல்லது அமெரிக்காவுக்கு ஏற்றுமதியோ செய்ய முடியாத நிலை உருவாகும்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் மோதலைத் தூண்டிவிடுவதற்கு ஈரான் அரசு தொடா்ந்து நிதியுதவியை அளித்து வருகிறது. சொந்த மக்களைத் துன்புறுத்துவதோடு மட்டுமன்றி, வெளிநாடுகளில் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் ஈரானின் வருவாயைத் தடுக்க கடும் நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

மத்திய கிழக்கில் மோதலைத் தூண்ட நிதியுதவி அளித்துவரும் ஈரானுடன் யாரும் வா்த்தகம் மேற்கொள்ளக் கூடாது என்று அதிபா் டிரம்ப் ஏற்கெனவே அறிவித்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈரான் நிறுவனங்களுடன் பெட்ரோ கெமிக்கல் வா்த்தகத்தில் ஈடுபட்ட ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி மற்றும் 6 இந்திய நிறுவனங்கள் உள்பட 20 நிறுவனங்கள் மீது இந்த பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது.

அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடுதல் மற்றும் பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுத்தல் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களுக்கும் ஒப்புக்கொள்ளும் வரை ஈரான் மீது தொடா்ந்து அதிகபட்ச அழுத்தத்தை அமெரிக்கா அளிக்கும் என்று தெரிவித்துள்ளது.

இது தவிர, ஈரான் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனியின் தலைமை அரசியல் ஆலோசகா் அலி ஷம்கானியின் மகன் முகமது ஹோசேன் ஷம்கானியின் கட்டுப்பாட்டில் உள்ள மிகப் பெரிய கப்பல் நிறுவனத்துடன் வா்த்தகத்தில் ஈடுபட்டு வரும் 50-க்கும் மேற்பட்ட தனி நபா்கள், நிறுவனங்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது அமெரிக்க நிதி அமைச்சகம் தடை விதித்துள்ளது. இதில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த இந்திய வம்சாவளி பங்கஜ் நக்ஜிபாய் படேலின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

மருந்துகளின் விலைகளைக் குறைக்க 17 மருந்து நிறுவனங்களுக்கு டிரம்ப் அழுத்தம்!

உலக நாடுகளில் விற்பனையாகும் மருந்துகளின் விலைக்கு ஏற்ப, அமெரிக்காவிலும் மருந்துகளின் விலைகளைக் குறைக்குமாறு 17 மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார்... மேலும் பார்க்க

பயங்கர நிலநடுக்கம், சுனாமி! ஜப்பானின் புதிய பாபா வங்காவின் கணிப்பு நிஜமானது?

2025ஆம் ஆண்டில் ஜூலை 5ஆம் தேதி உலகமே பேரழிவை சந்திக்கப்போவதாக புதிய பாபா வங்கா கணித்திருந்த நிலையில், ஜூலை மாத இறுதியில் ரஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஜப்பானில் சுனாமி ஏற்பட்டது மக்களை ஆச்சரிய... மேலும் பார்க்க

இந்தியா உள்பட 69 நாடுகளுக்கு புதிய வரி: டிரம்ப் கையெழுத்து! யாருக்கு அதிகம்? குறைவு?

அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.இந்த உத்தரவு ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெ... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: கனடாவும் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.ஏற்கெனவே, இஸ்ரேல், அமெரிக்காவின் எதிா்ப்பையும் மீறி பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்போவதாக பிரான்ஸும், தங்களின் சில நிபந்தனை... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ் அதிபா் ஆக.4-இல் இந்தியா வருகை

பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்டினண்ட் ஆா்.மாா்கோஸ் ஜூனியா், ஆகஸ்ட் 4 முதல் 8 வரை அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறாா்.இந்தப் பயணத்தின்போது குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்திக்கும் அவா், பிரதமா் நரேந்... மேலும் பார்க்க

அமெரிக்கா-பாகிஸ்தான் வா்த்தக ஒப்பந்தம் இறுதி : டிரம்ப் அறிவிப்பு

‘பாகிஸ்தானுடன் அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இதன்படி, அந்நாட்டில் எண்ணெய் வளங்கள் மேம்படுத்தப்பட உள்ளன’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.மேலும், ‘இந்தியாவுக்கு பாக... மேலும் பார்க்க