செய்திகள் :

தேசிய விருது பெற்ற கிங் கான்! சிறந்த நடிகராக ஜவான் ஷாருக்!

post image

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் கிங் என்றழைக்கப்படும் ஷாருக் கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய திரைப்பட விருதுகளை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இன்று அறிவித்தது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகும் எதிர்பார்த்த சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக் கான் தட்டிச் சென்றுள்ளார்.

1992-ல் தனது திரைப்பயணத்தைத் தொடங்கி, 33 ஆண்டுகளாக திரையுலகில் தனக்கென தனியிடத்தையும் நீங்கா இடத்தையும் பெற்றிருக்கும் ஷாருக் கான், ஜவான் படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

தமிழ் இயக்குநர் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லீஸ் என்டெர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் நடிகர்கள் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் அனிருத் இசையமைப்பில் வெளியான ஜவான் திரைப்படம், உலகளவில் வசூல்ரீதியாக சாதனை படைத்தது.

1992-ல் தீவானே திரைப்படத்தில் அறிமுகமான ஷாருக் கான்தான், தற்போது இந்திய திரையுலகின் தவிர்க்க முடியாத அடையாளமாகவும் இருந்து வருகிறார்.

மேலும், 12th ஃபெயில் படத்தில் நடித்த விக்ராந்த் மாஸிக்கும் சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதை இருவரும் பகிர்ந்து கொள்கின்றனர்.

Shah Rukh Khan set to win his first ever National Film Award as Best Actor for Jawan

நீதிமன்றத்தில் மீண்டும் கதறி அழுத பிரஜ்வால் ரேவண்ணா! குறைந்தபட்ச தண்டனை கேட்டு!!

புது தில்லி: முன்னாள் பிரதமர் தேவே கௌடாவுன் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் கதறி அழுதார். வீட்டுப் பணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ... மேலும் பார்க்க

நான் ராஜாவாக விரும்பவில்லை: ராகுல் பதில்! நிகழ்ச்சியில் ருசிகரம்!!

காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தான் ராஜாவாக ஒருபோதும் விரும்பவில்லை என்றும், அந்த முறையையே ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.புது தில்லியில் ... மேலும் பார்க்க

தீராத விளையாட்டுப் பிள்ளை... 9 வது திருமணத்தில் மாட்டிக் கொண்ட பெண்!

பணத்துக்காக பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண், 9 வது திருமணத்துக்கு தயாரான நிலையில், காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த சமீரா பாத்திமா என்ற பெண் கடந்த 15 ஆண்டு... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் அமைச்சர் ராம்தாஸ் சோரனுக்கு மூளையில் காயம்: தில்லி மருத்துவமனைக்கு மாற்றம்!

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் குளியலறையில் தவறி விழுந்து காயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, மேல் சிகிச்சைக்காக அவர் தில்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதாக மாநில அமைச்சர் இர்பான் அன்சாரி த... மேலும் பார்க்க

குற்றவாளி என தீர்ப்பு! நீதிமன்றத்தில் தனித்துவிடப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா

எப்போதும் தொண்டர் படைசூழ, பாதுகாவலர்களின் உதவியோடு வெளியே வரும் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, நேற்று நீதிமன்றத்தில் தனியாகவே காணப்பட்டார்.பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை விடியோ எடுத்து மிர... மேலும் பார்க்க

ஆபரேஷன் அகால்: ஜம்மு - காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை!

இந்திய ராணுவத்தினர் நடத்திய ஆபரேஷன் அகால் நடவடிக்கையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.உளவுத் துறை தகவலைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இந்திய ராணுவம் தலைமையில் நேற்... மேலும் பார்க்க