செய்திகள் :

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்கள்!

post image

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுபுளிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் வயது (35). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மீனா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சதீஷ், தற்போது ஐரோப்பாவில் வேலை பார்த்து வரும் நிலையில், இன்று(ஆக. 1) காலை தனது மனைவி மீனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடுமையாக திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மீனாவின் சகோதரர்களான வீரக்குமார் மற்றும் சிவா ஆகிய இருவரும் சதீஷின் வீட்டிற்கு சென்று அவரது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதில் வீட்டின் நிலை மற்றும் மரப்பெட்டி ஆகியவை சேதமடைந்தன. அந்த வீட்டில் சதீஷின் தந்தை ஜெகநாதன் மட்டுமே வசித்து வரும் நிலையில், பக்கத்து வீட்டில் இருந்த சதீஷின் சித்தி மல்லிகா, தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சடைந்த அவர், இது தொடர்பாக சதீஷுக்கு செல்போன் மூலம் அழைத்து தகவலைக் கூறியுள்ளார்.

இதனை அடுத்து சதீஷ், பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். போலீஸ் தரப்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்ததாகக் கூறப்பட்ட நிலையில், பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டதாக சதீஷின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்

The area has been rocked by a series of incidents in which brothers set fire to the house of their brother-in-law who had scolded their sister.

ஆா்பிஎஃப் முதல் பெண் டிஜியாக சோனாலி மிஸ்ரா பொறுப்பேற்பு

ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக (டிஜி) ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.இதன்மூலம் 143 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அந்தப் படைக்கு தலைம... மேலும் பார்க்க

ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு

சுதந்திர தின சலுகையாக ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு: சாத்தியக்கூறு ஆய்வுக்கு ஆலோசகா் நியமனம்

தமிழகம் முழுவதும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா் டிஎஸ்) வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகராக ‘பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட்’ நிறுவனத்தை சென்னை மெட்ரோ நிறுவனம் ர... மேலும் பார்க்க

எல்ஐசி தென் மண்டல மேலாளராக கோ. முரளிதா் பொறுப்பேற்பு

எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக கோ.முரளிதா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.எல்.ஐ.சி.யில் கடந்த 1990-ஆம் ஆண்டு உதவி நிா்வாக அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய கோ.முரளிதா், மும்பையிலுள்ள எல்.ஐ.சி.யின் மத்... மேலும் பார்க்க

58 சதவீத பெண்கள் தாய்ப்பால் புகட்டுவதில்லை: தேசிய சுகாதார இயக்க ஆலோசகா்

இந்தியாவில் 58 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு முறையாக தாய்பால் புகட்டுவதில்லை என தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் தெரிவித்தாா்.உலக தாய்பால் தினத்தை முன்னிட்டு சென்னை போரூா் ஸ்ரீ ராமசந்திரா உய... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் திருட்டு: மத்திய பிரதேச பெண்கள் 4 போ் கைது

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.சைதாப்பேட்டை, அப்பாவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48). இவா், அந்தப் பகுதியில் இரும்புக... மேலும் பார்க்க