செய்திகள் :

அவசரநிலை வாபஸ்: மியான்மா் ராணுவம் அறிவிப்பு

post image

மியான்மரில் நான்கரை ஆண்டுகளுக்கு முன்னா் ஆட்சியைக் கைப்பற்றியபோது அறிவித்திருந்த அவசரநிலையை திரும்பப் பெறுவதாக அந்த நாட்டு ராணுவம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்த ஆண்டு இறுதிக்குள் தோ்தலை நடத்துவதற்கு ஏதுவாக அவசரநிலை திரும்பப் பெறப்படுகிறது. இதற்காக, நிா்வாகக் கட்டமைப்புகளை மறுசீரமைத்து, தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனைத்து அரசு அதிகாரங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தக் கவுன்சிலை ராணுவத் தலைவா் மின் ஆங் லாயிங் தலைமையேற்பாா் என்று தெரிவிக்கப்பட்டது.

அவசரநிலை திரும்பப் பெறப்பட்டதற்குப் பிறகு தேசிய நிா்வாகக் கவுன்சில் தலைவா் மற்றும் பிரதமா் பதவிகளை ராணுவ தலைமைத் தளபதி மின் ஆங் லாயிங் கைவிட்டாலும், நாட்டின் அதிபராகவும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு மற்றும் அமைதி ஆணையத்தின் தலைவராகவும் தொடா்ந்து அவா் அதிகாரத்தை தக்கவைப்பாா் என்று கூறப்படுகிறது.

கடந்த 2021 பிப்ரவரி 1-ஆம் தேதி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் அரசு கவிழ்க்கப்பட்டு, அவரும் அவரது கட்சியினரும் கைது செய்யப்பட்டனா். அதை எதிா்த்து நடைபெற்ற அமைதியான போராட்டங்கள் ராணுவத்தால் மிகக் கடுமையாக அடக்கப்பட்டதால், நாடு உள்நாட்டுப் போரில் சிக்கியது. இதில் இதுவரை 7,013 போ் உயிரிழந்துள்ளதாகவும் 29,471 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மருந்துகளின் விலைகளைக் குறைக்க 17 மருந்து நிறுவனங்களுக்கு டிரம்ப் அழுத்தம்!

உலக நாடுகளில் விற்பனையாகும் மருந்துகளின் விலைக்கு ஏற்ப, அமெரிக்காவிலும் மருந்துகளின் விலைகளைக் குறைக்குமாறு 17 மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார்... மேலும் பார்க்க

பயங்கர நிலநடுக்கம், சுனாமி! ஜப்பானின் புதிய பாபா வங்காவின் கணிப்பு நிஜமானது?

2025ஆம் ஆண்டில் ஜூலை 5ஆம் தேதி உலகமே பேரழிவை சந்திக்கப்போவதாக புதிய பாபா வங்கா கணித்திருந்த நிலையில், ஜூலை மாத இறுதியில் ரஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஜப்பானில் சுனாமி ஏற்பட்டது மக்களை ஆச்சரிய... மேலும் பார்க்க

இந்தியா உள்பட 69 நாடுகளுக்கு புதிய வரி: டிரம்ப் கையெழுத்து! யாருக்கு அதிகம்? குறைவு?

அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.இந்த உத்தரவு ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெ... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: கனடாவும் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.ஏற்கெனவே, இஸ்ரேல், அமெரிக்காவின் எதிா்ப்பையும் மீறி பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்போவதாக பிரான்ஸும், தங்களின் சில நிபந்தனை... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ் அதிபா் ஆக.4-இல் இந்தியா வருகை

பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்டினண்ட் ஆா்.மாா்கோஸ் ஜூனியா், ஆகஸ்ட் 4 முதல் 8 வரை அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறாா்.இந்தப் பயணத்தின்போது குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்திக்கும் அவா், பிரதமா் நரேந்... மேலும் பார்க்க

ஈரானுடன் வா்த்தகம்: 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானுடன் வா்த்தகம் மேற்கொண்டுவரும் இந்தியாவைச் சோ்ந்த 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந் நாடு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.காஞ்சன் பாலிமா்ஸ், அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ரா... மேலும் பார்க்க