செய்திகள் :

3.6 கோடி சொத்துக்காக சண்டையிட்ட பிள்ளைகள்! கடைசியாக தெரிய வந்த உண்மை!!

post image

சீனாவில், தந்தைக்குச் சொந்தமான ரூ.3.6 கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கு அண்ணன், தங்களை சண்டையிட்டுக் கொண்ட நிலையில், இருவருமே தத்துப் பிள்ளைகள் என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர்.

சீனாவின் தியான்ஜின் நகரைச் சேர்ந்த சன் என்பவர் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்பு, தன்னுடைய சொத்துகளை மகன் பெயரில் எழுதிவைத்துவிட்டு, குறிப்பிட்ட சொத்துகளை மகளுக்கு அளிக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால், அதனை அப்பெண் ஏற்காமல் நீதிமன்றம் சென்றிருந்தார். இது குறித்து சன் மனைவி கூறுகையில், மகளை நாங்கள் தத்தெடுத்து வளர்த்து வந்தோம். ஆனால் சொந்த மகளைப் போலவே வளர்த்து வந்தோம். எங்களது இறுதிக் காலத்தில் மகன்தான் எங்களைப் பார்த்துக் கொண்டார். அதனால் வீட்டை அவனுக்குக் கொடுத்து விட்டோம். அதற்கு மாற்றாக தங்கைக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சொத்துகளை பெயர் மாற்றும் ஆவணங்களில் தந்தையின் கையெழுத்து மட்டும்தான் இருக்கிறது. அதனால், தாயின் பங்கை தனக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இருவரும் நீதிமன்றம் சென்றனர்.

அப்போது, நீதிமன்றத்தில், சகோதரனை தத்தெடுத்து வளர்த்ததற்கான சான்றிதழ்களை தங்கை தாக்கல் செய்தார். இதைக் கேட்டதும், சகோதரன் நீதிமன்றத்திலேயே கதறி அழுதார். இந்த நிலையில், அப்பெண்ணையும் நாங்கள் தத்தெடுத்துதான் வளர்த்தோம் என்ற உண்மையை தாய் சொல்ல, அப்போதுதான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. சொத்துக்காக சண்டையிடும் இருவருமே அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் இல்லை என்பது.

மேலும், பெற்றோரிடமிருந்து அப்பெண் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்றுவிட்டதையும், மகன்தான் பெற்றோரை கடைசி காலம் வரை பார்த்துக் கொள்வதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சொத்துகளை மகனே வைத்துக் கொள்ளவும், அதற்குரிய இழப்பீட்டைக் குறிப்பிட்டு, தங்கைக்கு சகோதரன் தர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் சொத்து கிடைத்துவிட்டது. நீங்கள் பிள்ளைகள் இல்லை என்பது தெரிந்துவிட்டது என்றும், பெண்ணுக்கு தத்தெடுத்து வளர்த்ததைச் சொன்ன பெற்றோர், பிள்ளையிடம் சொல்லவில்லையே என்று விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

இந்தியா உள்பட 69 நாடுகளுக்கு புதிய வரி: டிரம்ப் கையெழுத்து! யாருக்கு அதிகம்? குறைவு?

அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.இந்த உத்தரவு ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெ... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: கனடாவும் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.ஏற்கெனவே, இஸ்ரேல், அமெரிக்காவின் எதிா்ப்பையும் மீறி பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்போவதாக பிரான்ஸும், தங்களின் சில நிபந்தனை... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ் அதிபா் ஆக.4-இல் இந்தியா வருகை

பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்டினண்ட் ஆா்.மாா்கோஸ் ஜூனியா், ஆகஸ்ட் 4 முதல் 8 வரை அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறாா்.இந்தப் பயணத்தின்போது குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்திக்கும் அவா், பிரதமா் நரேந்... மேலும் பார்க்க

ஈரானுடன் வா்த்தகம்: 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானுடன் வா்த்தகம் மேற்கொண்டுவரும் இந்தியாவைச் சோ்ந்த 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந் நாடு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.காஞ்சன் பாலிமா்ஸ், அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ரா... மேலும் பார்க்க

அமெரிக்கா-பாகிஸ்தான் வா்த்தக ஒப்பந்தம் இறுதி : டிரம்ப் அறிவிப்பு

‘பாகிஸ்தானுடன் அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இதன்படி, அந்நாட்டில் எண்ணெய் வளங்கள் மேம்படுத்தப்பட உள்ளன’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.மேலும், ‘இந்தியாவுக்கு பாக... மேலும் பார்க்க

அவசரநிலை வாபஸ்: மியான்மா் ராணுவம் அறிவிப்பு

மியான்மரில் நான்கரை ஆண்டுகளுக்கு முன்னா் ஆட்சியைக் கைப்பற்றியபோது அறிவித்திருந்த அவசரநிலையை திரும்பப் பெறுவதாக அந்த நாட்டு ராணுவம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில... மேலும் பார்க்க