செய்திகள் :

மாலேகான் குண்டுவெடிப்பு: `இது நீதியே அல்ல’ - BJP Ex எம்.பி உட்பட 7 பேர் விடுதலையை எதிர்க்கும் ஒவைசி

post image

மகாராஷ்டிராவில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி மாலேகான் பகுதியிலுள்ள மசூதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், 6 பேர் உயிரிழந்தனர், 100-கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுதொடர்பான விசாரணையில், சம்பவம் நடந்த பகுதியில் பைக்கில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்துச் சிதறியது காரணம் என்று தெரியவந்தது.

கைதும் ஜாமீனும்..!

பின்னர் தடயவியல் சோதனையில், அந்த பைக் பா.ஜ.க முன்னாள் எம்.பி பிரக்யா சிங்குக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, அவர் உட்பட முன்னாள் ராணுவ அதிகாரி ரமேஷ் உபாத்யாய், ராணுவ உளவுப் பிரிவு அதிகாரி சுதாகர் சதுர்வேதி என 7 பேர் கைதுசெய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

பா.ஜ.க முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர்
பா.ஜ.க முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர்

போதிய ஆதாரம் இல்லை

17 ஆண்டுகளாக நடைபெற்று இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் வந்த நீதிமன்ற விசாரணை அனைத்தும் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறிருக்க, நேற்று முன்தினம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "எந்தவொரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது" என்று பேசியிருந்தார்.

அமித் ஷா இவ்வாறு கூறிய அடுத்த நாளான நேற்று (ஜூலை 31) நீதிமன்றம், மாலேகான் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-மம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு, "குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கெதிராக நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை" என அந்த 7 பேரையும் விடுத்தது.

இது நீதியே அல்ல

அமித் ஷா நாடாளுமன்றத்தில் மறைமுகமாக நற்சான்றிதழ் கொடுத்த அடுத்த நாளே, மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கெதிராக போதிய ஆதாரம் இல்லை என விடுத்திருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

அந்த வரிசையில், இது தொடர்பாகத் தனியார் ஊடக நேர்காணலில் பேசியிருக்கும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவரும், எம்.பி-யான அசாதுதீன் ஒவைசி, "தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு நாம் என்ன சொல்லப் போகிறோம்?

ஒவைசி
ஒவைசி

RDX ஒரு பிளாஸ்டிக் வெடிபொருள். அதைப் பயன்படுத்திய இவர்கள் யார்?

அவர்களைப் பிடித்து சிறைக்கு அனுப்பாவிட்டால், அவர்கள் தண்டனையின்றி சுற்றித் திரிவார்கள்.

இது நீதியே அல்ல. நரேந்திர மோடி அரசும், மகாராஷ்டிரா அரசும் ரயில்வே குண்டுவெடிப்பு வழக்கில் நடந்ததைப்போல 24 மணி நேரத்திற்குள் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லும் என்று நம்புகிறேன்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி முக்கியம்." என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 முக்கிய செய்திகள்!

சௌதி அரேபியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் விழுந்ததில் 23 பேர் காயமடைந்தனர்.கேரளா பள்ளிகளில் ஒரு மாத விடுமுறையை வெயில் காலத்துக்கு பதில் மழைக் காலத்தில் அளிப்பது குறித்து மக்களிடம் கருத்த... மேலும் பார்க்க

"ஓ.பி.எஸ், முதல்வரை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்திருப்பார்" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை விளாங்குடியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். "அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ் வெளியேறிவிட்டாரே" என்ற கேள்விக்கு,"அவர் அதிமுக கூட்... மேலும் பார்க்க

"இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது" - ட்ரம்ப் கருத்தை ஏற்ற ராகுல் காந்தி; முரண்பட்டாரா சசி தரூர்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவை "இறந்த பொருளாதரம்" என விமர்சித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது எதிர்க்கட்சித் தலைவர் ரா... மேலும் பார்க்க

Trump: பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்கா; பாக்-இல் எண்ணெய் வளமா? ட்ரம்ப் கூறுவது உண்மையா?

'பாகிஸ்தானுடன் இப்போது தான் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். அதன் படி, பாகிஸ்தானில் எண்ணெய் வளங்களை மேம்படுத்துவதில், அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவ உள்ளது.இரு நாடுகளின் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஒரு எண... மேலும் பார்க்க

ட்ரம்ப் - பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் நெருக்கம்; குறைந்த வரி விகிதம்! - இதற்கான 4 காரணங்கள் என்ன?

இந்தியாவுக்கு 25 சதவிகித வரிப் போட்டு தள்ளியிருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு 19 சதவிகித வரியைத் தான் போட்டுள்ளார். மேலும், ட்ரம்பிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள நட்பு வலுத்து வரு... மேலும் பார்க்க

"கவின் தாயார் கண்ணீருக்கு பதில் இருக்கிறதா? திமுக ஆட்சிக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகியும்..." - சீமான்

திருநெல்வேலியில் ஜூலை 27-ம் தேதி கவின் என்பவர் சுர்ஜித் என்பவரால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.இதில், கொலையாளி சுர்ஜித் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் தாய் தந்தையான காவல்துறை அதிகாரிகள் சரவணன்,... மேலும் பார்க்க