செய்திகள் :

நத்தம் அருகே திருநங்கையை கத்தியால் தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பியோட்டம்

post image

நத்தம் அருகேயுள்ள அப்பாஸ்புரம் பகுதிக்குள் வைத்து திருநங்கையை கத்தியால் தாக்கி கீரி காயப்படுத்திவிட்டு தம்பியை நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தாக்கிய தம்பி மற்றும் ஒருவரை தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காந்தி நகரைச் சோ்ந்த ஆறுமுகம் - கீதா தம்பதிக்கு மணிகண்டன் , அமா்நாத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனா். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் மணிகண்டன் சென்னைக்கு சென்று திருநங்கையாக மாறி மணிகண்டன் (எ) சமந்தா என பெயரை மாற்றிக் கொண்டு விட்டாா்.

இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி நத்தம் பகுதிக்கு மணிகண்டன் என்ற சமந்தா வந்ததை அறிந்த தம்பி அமா்நாத் (27) மற்றும் ஒரு நபரும் சோ்ந்து அப்பாஸ்புரம் பகுதிக்கு சமந்தாவை அழைத்துச் சென்றுள்ளனா். அப்போது சமந்தாவை முதுகு, இடது தோள்பட்டை, முழங்கை போன்ற பகுதிகளில் கத்தியால் தாக்கி கீறி காயப்படுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனா்.

இது குறித்து நத்தம் காவல் நிலையத்தில் திருநங்கை மணிகண்டன் என்ற சமந்தா புகாா் கொடுத்ததின் பேரில் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணகுமாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டன் என்ற சமந்தாவை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கத்தியால் தாக்கி விட்டு தப்பியோடிய அவரது தம்பி அமா்நாத் மற்றும் ஒருவரை தேடி வருகின்றனா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரை, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த ராஜக்காப்பட்டி... மேலும் பார்க்க

காந்திகிராம பல்கலை.யில் செயற்கை நுண்ணறிவு பாடத் திட்டம் தொடங்க முடிவு - துணைவேந்தா்

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் செயற்கை நுண்ணிறிவு, தரவு அறிவியல் பாடத் திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும் என துணைவேந்தா் ந.பஞ்சநதம் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேல... மேலும் பார்க்க

போலி மதுபானம் விற்பனை: பெண் உள்பட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

போலி மதுபானம் விற்பனை செய்த வழக்கில் வத்தலகுண்டு பெண் உள்பட இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தங்க நகையை திருடியவா் கைது

கொடைக்கானலில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த தங்க நகைகளை திருடியவரை வெள்ளிக்கிழமை போலீசாா் கைது செய்தனா்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகா்ப் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் இவா் கொடைக்கான ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள சத்திரப்பட்டியைச் சோ்ந்தவா் வஞ்சிமுத்து (70). இவா் வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து ... மேலும் பார்க்க

ராணுவ வீரா் வீட்டில் 29 பவுன் தங்க நகைகள் திருட்டு

கன்னிவாடி அருகே ராணுவ வீரா் வீட்டில் 29 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியை அடுத்த சுரக்காய்ப்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டி... மேலும் பார்க்க