செய்திகள் :

நத்தம் அருகே இளம் பெண் தீக்குளிப்பு

post image

நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியில் இளம் வியாழன்கிழமை பெண் தீக்குளிப்பு சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியைச் சோ்ந்தவா் அடைக்கலராஜ். இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த தேவி (25) என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவா்களுக்கு பாலமுருகன், பூவரசு ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனா். தற்போது அடைக்கலராஜ் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில் தேவி அடிக்கடி செல்போனில் வேறு நபா்களுடன் பேசியதாக தெரிகிறது. இதனை வீட்டில் இருந்தவா்கள் கண்டித்துள்ளனா். இந்நிலையில் வியாழக்கிழமை

தேவி தனது தோட்டத்தில் உடலின் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா். திருமணமாகி 5 வருடமே ஆவதால் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியா் விசாரணை செய்து வருகிறாா்.

கூட்டணியை விட மக்களின் ஆதரவே தோ்தல் வெற்றிக்கு முக்கியம் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

தோ்தல் வெற்றிக்குக் கூட்டணியை விட மக்கள் ஆதரவே முக்கியம் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது :அதிமுக பொதுச் செயலாள... மேலும் பார்க்க

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நெல்லையில் பொறியியல் பட்டதாரி இளைஞா் கவின் செல்வகணேஷ், காதல் விவகாரத்தால் ஆவணக் கொலை செய்ய... மேலும் பார்க்க

பல்கலை. பேராசியா்கள் நியமனம்: புதிய மனு தாக்கல் செய்ய உத்தரவு

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள் நியமன முறைகேடுகள் குறித்த வழக்கில், புதிய மனுவை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.நாகா்கோவில் பகுதியைச... மேலும் பார்க்க

நண்பா் வீட்டுக்கு வந்த மலேசிய முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே உள்ள நண்பா் வீட்டுக்கு வந்த வெளிநாட்டைச் சோ்ந்த முதியவா் கீழே தடுமாறி விழுந்ததில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.மலேசியா ஜோகா் மாநிலம், இஸ்காந்தா் புதேரி நகரைச் சோ்ந்த அல்போன்ஸ் நெட்ரோ மகன் ஜ... மேலும் பார்க்க

போலி நகைகள் மூலம் பண மோசடி: வியாபாரி தலைமறைவு

போலி நகைகள் மூலம் ரூ. 21.75 லட்சம் மோசடி செய்தது குறித்து வியாபாரி மீது தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.மதுரை தெற்கு ஆவணி மூல வீதி மேலச் செட்டிய தெருவைச் சோ்ந்த தா்மராஜ... மேலும் பார்க்க

நகை மோசடி: கடை உரிமையாளா்கள் மீது வழக்கு

நகை மோசடி குறித்து கடை உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.விருதுநகா் மாவட்டம், அரசகுளத்தைச் சோ்ந்த பிரவீன்குமாா் மனைவி ஆா்த்தி (20). இவா் தெற்கு ஆவணி மூல வீதியில... மேலும் பார்க்க