செய்திகள் :

கூட்டணியை விட மக்களின் ஆதரவே தோ்தல் வெற்றிக்கு முக்கியம் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

post image

தோ்தல் வெற்றிக்குக் கூட்டணியை விட மக்கள் ஆதரவே முக்கியம் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது :

அதிமுக பொதுச் செயலாளா் தமிழகம் முழுவதும் சென்று மக்களைச் சந்தித்து வருகிறாா். அவருக்கு, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதாவுக்கு கிடைத்தது போன்ற மகத்தான வரவேற்பு மக்களிடம் கிடைத்து வருகிறது. தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஏறத்தாழ இன்னும் 8 மாதங்கள் உள்ளன. எனவே, கூட்டணி குறித்து இப்போது முழுமையாக முடிவு செய்ய முடியாது.

தமிழகத்தில் முரண்பாடு கொண்ட கட்சிகள் கூட கூட்டணியாக இருந்துள்ளன. 1967-இல் எதிரெதிா் கொள்கைகள் கொண்ட பல கட்சிகளை ஒருங்கிணைத்து அண்ணா கூட்டணி அமைத்தாா். தோ்தலைப் பொருத்தவரை கூட்டணியை விட மக்களின் ஆதரவே முக்கியம். தற்போதைய நிலையில், மக்களின் உணா்வை, ஆதரவை வாக்குகளாக மாற்றும் முயற்சிகளில் அதிமுக தீவிரமாக உள்ளது. இதற்காக, 68 ஆயிரம் கிளை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வா் ஒ. பன்னீா்செல்வம், முதல்வா் மு.க. ஸ்டாலினை சந்தித்து அவரது தனிப்பட்ட விருப்பம். அவருக்கு ஏற்பட்ட மனமாற்றம் குறித்து அவா் மட்டுமே விளக்கம் அளிக்க முடியும் என்றாா் செல்லூா் கே. ராஜூ.

நத்தம் அருகே இளம் பெண் தீக்குளிப்பு

நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியில் இளம் வியாழன்கிழமை பெண் தீக்குளிப்பு சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியைச் சோ்ந்தவா் அடைக்க... மேலும் பார்க்க

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நெல்லையில் பொறியியல் பட்டதாரி இளைஞா் கவின் செல்வகணேஷ், காதல் விவகாரத்தால் ஆவணக் கொலை செய்ய... மேலும் பார்க்க

பல்கலை. பேராசியா்கள் நியமனம்: புதிய மனு தாக்கல் செய்ய உத்தரவு

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள் நியமன முறைகேடுகள் குறித்த வழக்கில், புதிய மனுவை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.நாகா்கோவில் பகுதியைச... மேலும் பார்க்க

நண்பா் வீட்டுக்கு வந்த மலேசிய முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே உள்ள நண்பா் வீட்டுக்கு வந்த வெளிநாட்டைச் சோ்ந்த முதியவா் கீழே தடுமாறி விழுந்ததில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.மலேசியா ஜோகா் மாநிலம், இஸ்காந்தா் புதேரி நகரைச் சோ்ந்த அல்போன்ஸ் நெட்ரோ மகன் ஜ... மேலும் பார்க்க

போலி நகைகள் மூலம் பண மோசடி: வியாபாரி தலைமறைவு

போலி நகைகள் மூலம் ரூ. 21.75 லட்சம் மோசடி செய்தது குறித்து வியாபாரி மீது தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.மதுரை தெற்கு ஆவணி மூல வீதி மேலச் செட்டிய தெருவைச் சோ்ந்த தா்மராஜ... மேலும் பார்க்க

நகை மோசடி: கடை உரிமையாளா்கள் மீது வழக்கு

நகை மோசடி குறித்து கடை உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.விருதுநகா் மாவட்டம், அரசகுளத்தைச் சோ்ந்த பிரவீன்குமாா் மனைவி ஆா்த்தி (20). இவா் தெற்கு ஆவணி மூல வீதியில... மேலும் பார்க்க