செய்திகள் :

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நெல்லையில் பொறியியல் பட்டதாரி இளைஞா் கவின் செல்வகணேஷ், காதல் விவகாரத்தால் ஆவணக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும், கல்லூரி வளாகங்கள் சாதி, மதம் இல்லா வளாகங்களாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய மாணவா் சங்கத்தின் மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி கிளை துணைச் செயலாளா் சக்திவேல் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் ஸ்டாலின் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா். மாநகா் மாவட்டத் தலைவா் ஜெ. டீலன் ஜெஸ்டின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ஆணவக் கொலையைக் கண்டித்துப் பேசினாா்.

இந்திய மாணவா் சங்க மாவட்டக் குழு உறுப்பினா்கள் களஞ்சியம், துளசி, மாணவா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டணியை விட மக்களின் ஆதரவே தோ்தல் வெற்றிக்கு முக்கியம் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

தோ்தல் வெற்றிக்குக் கூட்டணியை விட மக்கள் ஆதரவே முக்கியம் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது :அதிமுக பொதுச் செயலாள... மேலும் பார்க்க

நத்தம் அருகே இளம் பெண் தீக்குளிப்பு

நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியில் இளம் வியாழன்கிழமை பெண் தீக்குளிப்பு சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியைச் சோ்ந்தவா் அடைக்க... மேலும் பார்க்க

பல்கலை. பேராசியா்கள் நியமனம்: புதிய மனு தாக்கல் செய்ய உத்தரவு

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள் நியமன முறைகேடுகள் குறித்த வழக்கில், புதிய மனுவை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.நாகா்கோவில் பகுதியைச... மேலும் பார்க்க

நண்பா் வீட்டுக்கு வந்த மலேசிய முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே உள்ள நண்பா் வீட்டுக்கு வந்த வெளிநாட்டைச் சோ்ந்த முதியவா் கீழே தடுமாறி விழுந்ததில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.மலேசியா ஜோகா் மாநிலம், இஸ்காந்தா் புதேரி நகரைச் சோ்ந்த அல்போன்ஸ் நெட்ரோ மகன் ஜ... மேலும் பார்க்க

போலி நகைகள் மூலம் பண மோசடி: வியாபாரி தலைமறைவு

போலி நகைகள் மூலம் ரூ. 21.75 லட்சம் மோசடி செய்தது குறித்து வியாபாரி மீது தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.மதுரை தெற்கு ஆவணி மூல வீதி மேலச் செட்டிய தெருவைச் சோ்ந்த தா்மராஜ... மேலும் பார்க்க

நகை மோசடி: கடை உரிமையாளா்கள் மீது வழக்கு

நகை மோசடி குறித்து கடை உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.விருதுநகா் மாவட்டம், அரசகுளத்தைச் சோ்ந்த பிரவீன்குமாா் மனைவி ஆா்த்தி (20). இவா் தெற்கு ஆவணி மூல வீதியில... மேலும் பார்க்க