செய்திகள் :

ட்ரம்ப் - பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் நெருக்கம்; குறைந்த வரி விகிதம்! - இதற்கான 4 காரணங்கள் என்ன?

post image

இந்தியாவுக்கு 25 சதவிகித வரிப் போட்டு தள்ளியிருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு 19 சதவிகித வரியைத் தான் போட்டுள்ளார்.

மேலும், ட்ரம்பிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள நட்பு வலுத்து வருகிறது. இதற்கான முக்கிய காரணங்கள் இதோ...

கிரிப்டோவும், ட்ரம்ப் குடும்பமும்!

பாகிஸ்தானின் பொருளாதார நிலை உலகம் அறிந்ததே. அது மிக மிக தள்ளாடி வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் 'கிரிப்டோ கரன்சி' தங்களது நாட்டின் பொருளாதாரத்தை மாற்றும் என்று நம்புகிறது.

இதற்காக, 'பாகிஸ்தான் கிரிப்டோ கவுன்சில்' என்ற ஒன்றையும் தொடங்கி உள்ளது பாகிஸ்தான்.

இந்தக் கவுன்சிலிற்கு முழுக்க முழுக்க உதவுவது 'வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்சியல்' அமைப்பு.

கிரிப்டோ
கிரிப்டோ

'அதற்கு என்ன?' என்று நினைக்கிறீர்களா... இந்த அமைப்பின் பின் இருப்பதே ட்ரம்பின் குடும்பம் தான்.

இதன் மூலம் பாகிஸ்தானில் கிரிப்டோக்களை நடைமுறைப்படுத்துவது, சட்டப்பூர்வமாக்கப்படுவது, ட்ரம்ப் டோக்கன்கள் போன்றவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பாகிஸ்தான் மூலம் ஒரு நாடே தங்களது கிரிப்டோக்களை சந்தைப்படுத்த கிடைக்கும்போது, இது ட்ரம்ப் குடும்ப பிசினஸிற்கு மிகப்பெரிய பிளஸாக மாற உள்ளது என்கிறார்கள்.

ஆக, கிரிப்டோ மூலம் ட்ரம்ப் அரசியல் ரீதியாக மட்டுமல்ல, தனது பிசினஸ் மூலமாகவும் பாகிஸ்தானுடன் இணைகிறார்.

அமெரிக்காவும், எண்ணெயும்!

பாகிஸ்தான் தங்களிடம் 8 - 50 டிரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கனிமங்கள் இன்னும் தோண்டப்படாமல் உள்ளதாக கூறியுள்ளது. இந்தக் கனிமங்களில் எண்ணெய், செம்பு, தங்கம், லித்தியம், அரிய கனிமங்கள் அடங்கும்.

இந்தக் கனிமங்கள் தற்போதைய சூழலில், பேட்டரிகள், எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.

எண்ணெய் வளங்கள்
எண்ணெய் வளங்கள்

இந்த நிலையில், நேற்று ட்ரம்ப் பாகிஸ்தானில் எண்ணெய் வளங்களை மேம்படுத்த உதவ உள்ளதாக கூறியுள்ளார்.

இத்தோடு நின்றுவிடாமல், 'இந்தியா ஒரு நாள் பாகிஸ்தானில் இருந்து எண்ணெய் வாங்கும்' என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவும் போது, அமெரிக்கா பாகிஸ்தானில் இருக்கும் வளங்களைப் பயன்படுத்தும். இந்த வரி விதிப்பு குறைப்பிற்கு இது மிக முக்கிய காரணம்.

அமெரிக்கா கனிமங்கள், மூலப் பொருள்களுக்கு போன்றவற்றிற்கு சீனாவை நம்பி இருக்கிறது.

இதை தவிர்க்கத் தான், பாகிஸ்தானைத் தற்போது ட்ரம்ப் பிடித்துள்ளார்.

ஈராக்...

அமெரிக்கா - ஈராக் உறவு விரிசலடைந்துள்ளது. இதை சரிசெய்ய, அந்த நாட்டை அமெரிக்க சந்தையாக மாற்ற, ட்ரம்பிற்கு கிடைத்திருக்கும் ஒரு துருப்பு சீட்டு பாகிஸ்தான்.

காரணம், பாகிஸ்தானுக்கு - ஈராக்கிற்கும் நல்ல நட்பு உண்டு. இதற்காக கூட, ட்ரம்ப் பாகிஸ்தானுடன் நல்ல உறவு ஏற்படுத்த விரும்பலாம் என்று கூறப்படுகிறது.

ஈராக்
ஈராக்

ட்ரம்பிற்கும், பாகிஸ்தானுக்கும் நெருக்கம் ஏன்?

சமீப கால, ட்ரம்பின் பேச்சுகளில் அவரது நோபல் பரிசு ஆசை வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

இதை முதன்முதலில் உசுப்பேற்றி விட்டதே பாகிஸ்தான் தான்.

அமெரிக்காவிற்கு அலுவல் ரீதியாக பயணம் சென்றிருந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், 'இந்தியா - பாகிஸ்தான் இடையே ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்ததால் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பரிசாக அசிம் முனீருக்கு வெள்ளை மாளிகையில் விருந்து கொடுக்கப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்தத் தாக்குதலில் 'நான் தான்' மத்தியஸ்தம் செய்தேன் என்று கூறிவரும் ட்ரம்பின் கூற்றுக்கு, இன்று வரை இந்தியா மல்லுக்கு நிற்கிறது.

ஆனால், பாகிஸ்தான் அப்படியே ஒப்புக்கொண்டது.

மேலும், ட்ரம்ப் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் பாகிஸ்தான் செய்கிறதோ... இல்லையோ... ஏற்றுக்கொள்கிறது. அதனால் தான், ட்ரம்பிற்கு பாகிஸ்தான் மீது சாஃப்ட் கார்னர் வந்து, இப்படிப்பட்ட விஷயங்களைத் செய்து வருகிறார்.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

மோடி - ஓபிஎஸ் சந்திப்பு விவகாரம்: "இனியாவது உண்மைய பேசுங்க" - நயினார் நகேந்திரனைத் தாக்கும் ஓபிஎஸ்

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியுள்ளது அவரது பயணத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

Rahul Gandhi: "நான் ராஜா அல்ல; ராஜா என்ற கோட்பாட்டுக்கு எதிரானவன்" - ராகுல் காந்தி ஓபன் டாக்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த பிறகு தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார்.அதன்பின்னர், காங்கிரஸ் எம்.பி-யாகச் செயல்பட்டு வந்த ராகுல் காந்தி தற்போது மக்களவை எதிர்க்கட... மேலும் பார்க்க

"இறந்தவர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்" - ராகுல் காந்தியின் பேச்சுக்கு அருண் ஜெட்லி மகன் பதில்

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறித்துப் பேசிய கருத்துக்களுக்கு அவரது மகன் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார்.விவசாயிகள் சட்டம் அறிம... மேலும் பார்க்க

SIR: "என் பெயரில்லை; நான் எப்படிப் போட்டியிடுவது" -தேஜஸ்வி கேள்விக்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், ஒரே மாதத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) தே... மேலும் பார்க்க

பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணாவுக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை; சிறப்பு நீதிமன்றம் அதிரடி

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா நேற்று நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க

"ஓ.பி.எஸ் வந்துகொண்டிருக்கிறார்..!" - கூட்டணி குறித்து திமுக அமைச்சர் பேச்சு!

திருச்சியில் 'நலன் காக்கும் ஸ்டாலின்' முகாமைப் பார்வையிட்ட நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக கூட்டணிக்கு வருவதாகப் பேசியிரு... மேலும் பார்க்க