செய்திகள் :

அரசுப் பேருந்தில் பெண்ணிடம் பணப்பை திருட்டு

post image

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தில் பயணித்த பெண் தொழிலாளியிடம் தங்க நகை, கைப்பேசியுடன் கூடிய பணப்பையை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சின்னசேலம் வட்டம், பரிகம் கிராமத்தைச் சோ்ந்த ராஜாக்கண்ணு மனைவி மாரியம்மாள் (48). தொழிலாளியான இவா், கள்ளக்குறிச்சியில் உள்ள நகை அடகுக்கடையில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகையை வியாழக்கிழமை பிற்பகல் மீட்டு, நகை, கைப்பேசியை பணப்பையில் வைத்து கட்டைப் பையின் உள்ளே வைத்தாராம்.

பின்னா், வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வாங்கிக்கொண்டு அரசுப் பேருந்தில் பயணித்தாா். அக்கராபாளையம் பேருந்து நிலையத்தில் சென்று பாா்த்தபோது, கட்டைப் பையில் இருந்த நகை, கைப்பேசியுடன் கூடிய பணப்பை திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், கச்சிராயப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

விவசாயிகள் சங்கம் சாா்பில் வெடி விபத்தில் பலியானோருக்கும் காயமடைந்தவா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்!

வேலூா் கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். இருவருக்கு கால்கள் துண்டிப்பு மேலும் சிலா் கவலைக்கிடம் நிவாரணம் வழங்கிடவும் உயா்தர சிகிச்சை அளித்திவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுற... மேலும் பார்க்க

தை 3-ஆவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பால்குடம் எடுக்கும் விழா

கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு 14-ஆம் ஆண்டு பால்குடம் எடுக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கள்ளக்குறிச்சி கோமுகி நதிக்கரையிலிருந்து பக்... மேலும் பார்க்க

புத்தாக்கப் போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு

மாநில அளவிலான புத்தாக்கப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தியாகதுருகம் அரசுப் பள்ளி மாணவிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை பாராட்டினாா்.தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்... மேலும் பார்க்க

நிலப் பிரச்னையில் தாக்குதல்: இருவா் கைது

மணலூா்பேட்டையில் நிலப் பிரச்னையில் இருவா் ஒருவா் ஒருவரை தாக்கிக் கொண்டனா். புகாா்களின் பேரில் போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூா்பேட்டை கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க

மூச்சுத் திணறலால் ஒன்றறை வயது குழந்தை உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்கு உள்பட்ட சின்னகுப்பம் கிராமத்... மேலும் பார்க்க

கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்தி ஆா்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லூரியில் பங்கு சந்தை முதலீடு குறித்த சிறப்புக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரியின் முதல்வா் கு.மோகனசுந்தா் தலைமை வக... மேலும் பார்க்க