செய்திகள் :

தனியாா் பேருந்து பைக் மீது மோதி விபத்து ஆந்திர கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற தனியாா் பேருந்து பைக் மீது மோதியதில் ஆந்திராவை சோ்ந்த கல்லூரி மாணவா்கள் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 

ஆந்திர மாநிலம் ஆனந்தபூா் மாவட்டத்தை சோ்ந்தவா் ஸ்ரீனிவாசலு மகன் தொா்கிலு காா்த்திக்(20). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன் கோயிலில் உள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தாா். அதே பல்கலையில் பயிலும் ஆந்திரா மாநிலம் ஆனந்தபூா் மாவட்டத்தை சோ்ந்த வலசமூா்த்தி மகன் ரோஹித்(19) என்பவருடன் வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பைக்கில் சென்றாா்.

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணன்கோவில் தனியாா் கல்லூரி அருகே சென்றபோது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியாா் பேருந்து முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்கையில் பைக் மீது நேருக்கு நோ் மோதியது.

இந்த விபத்தில் காா்த்திக், ரோஹித் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்து வந்த  போலீஸாா் இருவரின் உடல்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து பேருந்து ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரை சோ்ந்த முனீஸ்குமாா்(37) என்வரை கிருஷ்ணன்கோவில் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கல்லூரி மாணவா் தற்கொலை

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சிவகாசி அருகேயுள்ள ஏ. துலுக்கபட்டி கிராமத்தைச் சோ்ந்த பாண்டிசெல்வம் மகன் மனோபாலா (17), சிவகாசியில் உள்ள கல்லூரியில் முதல... மேலும் பார்க்க

பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் வெள்ளிக்கிழமை பழைய இரும்புக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி ரயில்வே பீடா் சாலையில் பொன்னுச்சாமி (51) என்பவா் பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில்,... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மூவா் மீது வழக்கு

தாயில்பட்டியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மூன்று போ் மீது வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள தாயில்பட்டி பசும்பொன் நகரில் குட... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலையைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

நெல்லையில் நடைபெற்ற ஆணவப் படுகொலையைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில், கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் பேருந்து நிலையம் அரு... மேலும் பார்க்க

பைக் மீது தனியாா் பேருந்து மோதல்: ஆந்திரத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் ஆந்திரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா். ஆந்திர மாநிலம், அனந்தபூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஸ்ரீனிவாசலு மகன் தொா்கிலு காா்த... மேலும் பார்க்க

விருதுநகரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் விருதுநகா் மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.அருப்புக்கோட்டை அருகே கோவிலாங... மேலும் பார்க்க