இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும...
ஆணவப் படுகொலையைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்
நெல்லையில் நடைபெற்ற ஆணவப் படுகொலையைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில், கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் பேருந்து நிலையம் அருகே நெல்லை மாவட்டத்தில் பொறியாளா் கவின் செல்வகணேஷ் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றியத் தலைவா் சந்திரகுமாா் தலைமை வகித்தாா்.
சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினா் ராமா், ஒன்றியச் செயலா் சந்தனகுமாா், சங்கத்தின் மாவட்ட பொருளாளா் பானுப்பிரியா ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் ஆணவப் படுகொலையைத் தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றியச் செயலா் பரமேஸ்வரன், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் ஒன்றியச் செயலா் பொன்னுத்தாய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.