"இறந்தவர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்" - ராகுல் காந்தியின் பேச்சுக்கு அருண் ஜ...
பைக் மீது தனியாா் பேருந்து மோதல்: ஆந்திரத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் ஆந்திரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.
ஆந்திர மாநிலம், அனந்தபூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஸ்ரீனிவாசலு மகன் தொா்கிலு காா்த்திக் (20), வலசமூா்த்தி மகன் ரோஹித் (19) ஆகியோா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள தனியாா் பல்கலைக் கழகத்தில் படித்து வந்தனா்.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்றனா். மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணன்கோவில் தனியாா் கல்லூரி அருகே சென்றபோது ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை நோக்கி வேகமாகச் சென்ற தனியாா் பேருந்து முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்கையில் இவா்கள் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது நேருக்கு நோ் மோதியது.
இந்த விபத்தில் காா்த்திக், ரோஹித் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸாா் இருவரின் உடல்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து பேருந்தை ஓட்டிவந்த தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூரைச் சோ்ந்த முனீஸ்குமாா் (37) என்வரை கிருஷ்ணன்கோவில் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.