செய்திகள் :

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

post image

இந்திய சுழல்பந்து வீச்சாளர் சஹால் விவாகரத்து குறித்து பேசும்போது தான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.

சஹாலுக்கும் தனஸ்ரீ வர்மாவுக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர், கருத்து வேறுபாட்டால் இவர்கள் 2024-இல் பிரிந்தார்கள்.

சமீபத்தில் ஆர்ஹே மஹ்வேஷுடன் காதலில் இருக்கிறார். இதனால், அவர்மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

காதலியுடன் சஹால்...

இந்நிலையில் ராஜ் ஷமானி யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில் சஹால் பேசியதாவது:

எங்களுக்கு பிரச்னைகள் தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. அது ஒரு முடிவுக்கு வரும்வரை நாங்கள் அதை வெளியே காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

இருவருக்கும் நேரம் கிடைக்கவில்லை

நான் இந்திய அணிக்கும் அவர் அவரது வேலையிலும் பிஸியாக இருந்தோம். அதனால், இருவருக்கும் போதிய நேரம் கிடைக்கவில்லை. உறவில் எவ்வளவு நாள் நடிக்க முடியும்? அந்த ஒருநாள் வந்ததும் பிரிந்து விட்டோம்.

விவாகரத்தின்போது விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் இருந்து ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொண்டேன். ஏனெனில் என்னால் எனது மூளையைப் பயன்படுத்த முடியவில்லை.

கிரிக்கெட்தான் எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அதுதான் தொடர்ந்து என்னை மகிழ்ச்சியாக்குகிறது. அதை செய்ய முடியவில்லை எனில் ஏதோ தவறு நடக்கிறது என ஓய்வு எடுத்தேன்.

தற்கொலை எண்ணம் பீடித்தது

என் வாழ்க்கையில் நான் எப்போதும் யாரையும் ஏமாற்றியதில்லை. துரோகமும் செய்ததில்லை. நான் அப்படியான மனிதர் இல்லை. என்னைப் போல விசுவாசமான ஆளைப் பார்க்கமுடியாது. நான் இதை உலகத்துக்கு நிரூபிக்க வேண்டியதில்லை.

நான் அழுவதை ஏன் சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டும்? சில மாதங்களுக்கு முன்பு நான் மன அழுத்தத்தில் இருந்தேன்.

தற்கொலை எண்ணமும் இருந்தது. ஏன்னெனில் எனது மூளை வேலை செய்யவில்லை. மிகவும் பதட்டத்தில் இருந்தேன். இவையெல்லாம் என் நெருங்கிய வட்டத்துக்குத் தெரியும்.

இந்தக் கடுமையான நாளில் இருந்து என்னை எனது குடும்பத்தாரும் மஹ்வேஷும் மீட்டார்கள்.

எனது டீ ஷர்ட்டில் சுகர் டாடி வசனம் இருந்ததுக்குப் பிரச்னை ஆனது. அந்த நேரத்தில் இதைச் சொல்ல தோன்றியது. எதிர்புறத்தில் ஒன்று நடக்க, நான் எனக்குப் பிடித்ததைச் செய்ய முடிவெடுத்தேன் என்றார்.

ஓவல் டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில... மேலும் பார்க்க

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 21 ரன்களில் டெஸ்ட் போட்டிகளில் மிகப் பெரிய சாதனை படைப்பதை தவறவிட்டுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில... மேலும் பார்க்க

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்... மேலும் பார்க்க

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் தொடர்பான சர்ச்சை எழுந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் ப... மேலும் பார்க்க

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

இந்திய வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஜோ ரூட்டை வம்பிழுத்தது தங்களது திட்டங்களுல் ஒன்றாக இருந்தது எனக் கூறியுள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. க... மேலும் பார்க்க

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

ஆப்கன் வீரர் உஸ்மான் கனி ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தில் இசிஎஸ் டி10 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் லண்டன் கவுன்டி கிரிக்கெட் அணியும் கில்ட்ஃபோர்டு அணியும் மோ... மேலும் பார்க்க