செய்திகள் :

கிராமங்களில் சிறு, குறு கடைகளுக்கு உரிமம் தேவையில்லை! - தமிழக அரசு

post image

கிராமப்புறத்தில் சிறு, குறு கடைகளுக்கு உரிமம் தேவையில்லை என்று தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள வணிக கடைகளுக்கு உரிமம் இருப்பதுபோலவே ஊராட்சி பகுதிகளில் உள்ள வணிக கடைகளும் தொழில் உரிமம் பெறுவது கட்டாயம் என்று தமிழக அரசு கூறியிருந்தது.

டீக்கடைகள் முதல் திருமண மண்டபங்கள் வரை ரூ.250 முதல் ரூ.50,000 வரை கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதுதொடர்பாக ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியசாமி கூறியிருந்தார்.

இதனிடையே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்களும் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் கிராமப்புறங்களில் தொழில் தொடங்க சிறு, குறு கடைகளுக்கு உரிமம் பெறத் தேவையில்லை என்று அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.

மேலும், கிராமப்பகுதிகளில் உள்ள கடைகளுக்கு உரிமம் கட்டாயம் என்ற செய்தி தவறானது எனவும் தமிழ்நாடு அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.

TN govt announcement that micro, small shops in rural areas do not require shop licenses.

கவின் உடல் ஒப்படைப்பு! இன்று தகனம்!

ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் உடல் பெற்றோரிடம் வெள்ளிக்கிழமை காலை ஒப்படைக்கப்பட்டது.திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து கவினின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி மாவட்டம் ... மேலும் பார்க்க

கவின் உடலைப் பெற பெற்றோர் சம்மதம்!

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் உடலைப் பெற அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.வேறு சாதிப் பெண்ணை காதலித்ததற்காக தூத்துக்குடியைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ், நெல்லையில் கடந்த... மேலும் பார்க்க

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.இதுகுறித்து, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):1. சுன்சோ... மேலும் பார்க்க

7 மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக.2, 3) தஞ்சாவூா், நாகை உள்பட 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:மே... மேலும் பார்க்க

12 நாள்களுக்குப் பிறகு தலைமைச் செயலகம் வந்த முதல்வா்

உடல் நலம் பெற்றுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், 12 நாள்களுக்குப் பிறகு தலைமைச் செயலகம் வந்து பணிகளைத் தொடா்ந்தாா்.தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 27-... மேலும் பார்க்க

உயா் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்ற எஸ்.சி., எஸ்.டி. மாணவா்களுக்கு மடிக்கணினி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

புகழ் பெற்ற உயா் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்ற பட்டியலின, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள், சான்றிதழ்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் வெளியிடப்ப... மேலும் பார்க்க