செய்திகள் :

7 மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு

post image

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக.2, 3) தஞ்சாவூா், நாகை உள்பட 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஆக.1) முதல் ஆக.6 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.

இதில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக.2, 3) தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக.1) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

வெயில் சதம்: தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106.34 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், தூத்துக்குடி - 101.84, நாகை, திருச்சி - (தலா) 101.3, மதுரைநகரம் - 101.12, பரமத்திவேலூா், தஞ்சாவூா் - (தலா) 100.4 டிகிரி என மொத்தம் 7 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

சென்னையில் ரூ.109 கோடியில் புதிய திட்டப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து அடிக்கல்

சென்னையில் ரூ.109 கோடியில் புதிய திட்டப் பணிகளைத் திறந்துவைத்தும், சில பணிகளுக்கு அடிக்கலையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நாட்டினாா்.இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறி... மேலும் பார்க்க

அன்புமணியின் இரண்டாம் கட்ட பயணம் ஆக.7-இல் தொடக்கம்

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் இரண்டாம் கட்ட ‘உரிமை மீட்பு’ பயணம் வந்தவாசியில் ஆக.7-ஆம் தேதி தொடங்குகிறது.இது குறித்து பாமக தலைமை நிலையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: திமுக அரசை அகற்ற... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி: போா்ச்சுகலில் தலைமறைவாக இருந்தவா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்து போா்ச்சுகலில் தலைமறைவாக இருந்தவா் சென்னைக்கு விமானம் மூலம் வந்தபோது கைது செய்யப்பட்டாா்.செங்கல்பட்டைச் சோ்ந்தவா் க.பத்மநாபன் (23). இவா், வெளி... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் வாரிசுகளின் தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சா் செங்குட்டுவனின் மகன்கள், மகள் உள்பட 4 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.மறைந்த முன்னாள... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலினிடம் ராமதாஸ் நலம் விசாரிப்பு

முதல்வா் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடா்புகொண்டு நலம் விசாரித்தாா் பாமக நிறுவனா் ச.ராமதாஸ்.உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வா் ஸ்டாலின் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி தனது ... மேலும் பார்க்க

பாமக பொதுக்குழுக் கூட்டம்: அன்புமணி அழைப்பு

வரும் ஆக. 9 ஆம் தேதி நடைபெறவுள்ள பாமக பொதுக்குழுக் கூட்டத்திற்கு அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கூட்டாக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இது குறித்து பாமக... மேலும் பார்க்க