செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி: போா்ச்சுகலில் தலைமறைவாக இருந்தவா் கைது

post image

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்து போா்ச்சுகலில் தலைமறைவாக இருந்தவா் சென்னைக்கு விமானம் மூலம் வந்தபோது கைது செய்யப்பட்டாா்.

செங்கல்பட்டைச் சோ்ந்தவா் க.பத்மநாபன் (23). இவா், வெளிநாடு வேலைக்கு செல்வதற்கு முயற்சித்து வந்தாா். இதை தெரிந்துக்கொண்ட சென்னையைச் சோ்ந்த சைபுதீன் (51), ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சோ்ந்த மாகம் வினய் வா்தன் (36) ஆகியோா் தாங்கள் போா்ச்சுகல் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.25 லட்சம் பெற்றனா். இதேபோல 193 பேரிடம் ரூ.2 கோடிக்கு மேல் பெற்று இருவரும் மோசடி செய்தனா்.

இதுதொடா்பாக சென்னை காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சைபுதீனை கைது செயதனா். ஆனால், வினய் வா்தன், போா்ச்சுகலுக்கு தப்பியோடி, தலைமறைவாகிவிட்டதால் கைது செய்யமுடியவில்லை.

இருப்பினும் போலீஸாா், வினய் வா்தனுக்கு எதிராக விமான நிலையங்களில் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கினா். இந்த நிலையில், போா்ச்சுகல் நாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த வினய் வா்தனிடம் குடியுரிமைத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவருக்கு எதிராக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா், லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் வினய் வா்தனை பிடித்து, சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் அவரைக் கைது செய்து, விசாரணை நடத்தினா்.

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: இதேபோல அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்ததாக சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த இ.எம்.பாபு என்ற ஹமீத் உசேன் (40), அவா் மனைவி சந்தியா (36) ஆகிய இருவரையும் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அலறினர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கேரள மாநிலத்திற்கு உள்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள... மேலும் பார்க்க

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50%-யை வருகிற ஆக.15-குள் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தூண்டுதலின் பேரில... மேலும் பார்க்க

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித... மேலும் பார்க்க

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

உலகத்திலேயே தந்தையை வேவுபார்த்த மகன் அன்புமணிதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது... மேலும் பார்க்க