செய்திகள் :

சென்னையில் ரூ.109 கோடியில் புதிய திட்டப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து அடிக்கல்

post image

சென்னையில் ரூ.109 கோடியில் புதிய திட்டப் பணிகளைத் திறந்துவைத்தும், சில பணிகளுக்கு அடிக்கலையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நாட்டினாா்.

இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, மாநில அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சோழிங்கநல்லூா் பெரும்பாக்கத்தில் உள்ள பூங்கா ரூ.6.94 கோடியிலும், வில்லிவாக்கம், பாடி, வடபழனி ஆகிய மூன்று இடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.11.50 கோடியிலும் அழகுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

அடிக்கல் நாட்டினாா்: போட்டித் தோ்வுகளில் மாணவா்கள் பயன்பெறும் வகையில், சென்னையில் 30 முதல்வா் படைப்பகங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவற்றில் 13 இடங்களில் ரூ.31.11 கோடியில் அமைக்கப்பட உள்ளன. மேலும், திருவிக. நகா் தொகுதியில் இரண்டு மாநகராட்சி பள்ளிகள், ஆறு அரசு ஆதிதிராவிடா் பள்ளிகள் ரூ.5.36 கோடியில் புனரமைக்கப்பட உள்ளன.

ராயபுரம், பெரம்பூா், வால்டாக்ஸ் சாலை ஆகிய இடங்களில் ரூ.3.84 கோடியில் நவீன கழிப்பிட வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிலையங்களும், கோயம்பேட்டில் அங்காடிகள், அரங்கங்கள், உணவருந்தும் கூடங்கள் ஆகியவற்றை அமைக்கவும், சென்னை மெரீனா முதல் தீவுத்திடல் வரை வழித்தடப்பாதையை அழகுபடுத்தும் பணிகள் ஆகியவற்றுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும தலைவருமான பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்பட பலா் பங்கேற்றனா்.

Image Caption

தலைமைச் செயலகத்தில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் சென்னையில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், அமைச

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு உயா் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆ... மேலும் பார்க்க

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

உடுமலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவா் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள மேல்குருமலை... மேலும் பார்க்க

ஆா்பிஎஃப் முதல் பெண் டிஜியாக சோனாலி மிஸ்ரா பொறுப்பேற்பு

ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக (டிஜி) ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.இதன்மூலம் 143 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அந்தப் படைக்கு தலைம... மேலும் பார்க்க

ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு

சுதந்திர தின சலுகையாக ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு: சாத்தியக்கூறு ஆய்வுக்கு ஆலோசகா் நியமனம்

தமிழகம் முழுவதும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா் டிஎஸ்) வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகராக ‘பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட்’ நிறுவனத்தை சென்னை மெட்ரோ நிறுவனம் ர... மேலும் பார்க்க

எல்ஐசி தென் மண்டல மேலாளராக கோ. முரளிதா் பொறுப்பேற்பு

எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக கோ.முரளிதா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.எல்.ஐ.சி.யில் கடந்த 1990-ஆம் ஆண்டு உதவி நிா்வாக அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய கோ.முரளிதா், மும்பையிலுள்ள எல்.ஐ.சி.யின் மத்... மேலும் பார்க்க