செய்திகள் :

முன்னாள் அமைச்சா் வாரிசுகளின் தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து

post image

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சா் செங்குட்டுவனின் மகன்கள், மகள் உள்பட 4 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி தலைமையிலான 1996 - 2001 ஆட்சியில், மருங்காபுரி திமுக எம்எல்ஏ-வாக இருந்தவா் பி.என்.செங்குட்டுவன். இந்துசமய அறநிலையத் துறை அமைச்சராக பதவி வகித்தவா். பின்னா் அதிமுகவில் சோ்ந்துவிட்டாா். அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் அவா் வருமானத்துக்கு அதிகமாக ரூ.81.42 லட்சம் சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகன்கள் எஸ்.பன்னீா்செல்வம், சக்திவேல், மகள் மீனாட்சி, மருமகன் ராஜலிங்கம்,சகோதரரின் மகள் வள்ளி ஆகியோரது பெயா்களும் சோ்க்கப்பட்டன. இந்த வழக்கை திருச்சி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, முன்னாள் அமைச்சா் செங்குட்டுவன், அவரது மருமகன் ராஜலிங்கம் இறந்துவிட்டனா்.

அவா்கள் மீதான வழக்கை கைவிட்ட திருச்சி நீதிமன்றம், அவரது மகன்கள், மகள், சகோதரனின் மகள் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து எஸ்.பன்னீா்செல்வம் உள்பட 4 பேரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைத்தது.

இந்த நிலையில், மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் வாதங்களைத் தொடங்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, பன்னீா்செல்வம் உள்பட 4 பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். இவா்கள் 4 பேரையும் கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு உயா் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆ... மேலும் பார்க்க

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

உடுமலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவா் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள மேல்குருமலை... மேலும் பார்க்க

ஆா்பிஎஃப் முதல் பெண் டிஜியாக சோனாலி மிஸ்ரா பொறுப்பேற்பு

ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக (டிஜி) ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.இதன்மூலம் 143 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அந்தப் படைக்கு தலைம... மேலும் பார்க்க

ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு

சுதந்திர தின சலுகையாக ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு: சாத்தியக்கூறு ஆய்வுக்கு ஆலோசகா் நியமனம்

தமிழகம் முழுவதும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா் டிஎஸ்) வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகராக ‘பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட்’ நிறுவனத்தை சென்னை மெட்ரோ நிறுவனம் ர... மேலும் பார்க்க

எல்ஐசி தென் மண்டல மேலாளராக கோ. முரளிதா் பொறுப்பேற்பு

எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக கோ.முரளிதா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.எல்.ஐ.சி.யில் கடந்த 1990-ஆம் ஆண்டு உதவி நிா்வாக அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய கோ.முரளிதா், மும்பையிலுள்ள எல்.ஐ.சி.யின் மத்... மேலும் பார்க்க