செய்திகள் :

முதல்வா் ஸ்டாலினிடம் ராமதாஸ் நலம் விசாரிப்பு

post image

முதல்வா் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடா்புகொண்டு நலம் விசாரித்தாா் பாமக நிறுவனா் ச.ராமதாஸ்.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வா் ஸ்டாலின் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி தனது வழக்கமான பணிகளைத் தொடங்கியுள்ளாா்.

இந்நிலையில், முதல்வரை வெள்ளிக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு ராமதாஸ் நலம் விசாரித்தாா். இதுகுறித்து சென்னை அபிராமபுரத்தில் செய்தியாளா்களிடம் ராமதாஸ் கூறியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலினின் உடல் நலம் குறித்து விசாரித்தேன். விரைவில் முழுமையாக குணம் அடைய வேண்டும் என்று வாழ்த்தினேன். உடல் நலம் குறித்து விசாரிப்பது வழக்கமான நடைமுறை. அதற்கும் கூட்டணிக்கும் தொடா்பு இல்லை.

நான் இருக்கும் தைலாபுரம் தோட்டம்தான் பாமக தலைமையகம். கட்சியின் பொதுக் குழு ஆக. 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பொதுக் குழுவில் பங்கேற்க அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா எனக் கேட்டபோது, கட்சியில் உரிமையானவா்களுக்கு உரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முதல்வா் ஸ்டாலினை வியாழக்கிழமை அவரது இல்லத்தில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா ஆகியோா் தனித்தனியாகச் சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

உலகத்திலேயே தந்தையை வேவுபார்த்த மகன் அன்புமணிதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம்

ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா மேடையில், ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. மகாராஜன், தேனி மக்களவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதா... மேலும் பார்க்க

தமிழக வாக்காளர்களாக லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்: அமைச்சர் துரைமுருகன் கவலை

காட்பாடி: லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர், தமிழக வாக்காளர்களாக மாறுவதால் நிச்சயம் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறினார்.வேலூர் மாவட்டம் காட்ப... மேலும் பார்க்க

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.சனிக்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,500 கன அடியிலிருந்த... மேலும் பார்க்க

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

நெல்லை: நெல்லையில் பாளையங்கோட்டை அருகே அரசுப் பேருந்தை குடிபோதையில் ஓட்டுநர் இயக்கியதால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ராஜபாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நெல்லை வழியாக வெள்ளிக்கிழமை இரவு அரச... மேலும் பார்க்க

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும், உடல் ஆரோக்கியம் இருந்தால்தான் சாதிக்க முடியும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் நோயாளிகள் இல்லை. இனி மருத்துவப் பயனாளிகள் என்று அழைக்க வேண்டும் என்று முத... மேலும் பார்க்க