செய்திகள் :

Male birth control pill: ஆண்களுக்கான முதல் கருத்தடை மாத்திரை! - பக்க விளைவுகள் உண்டா?

post image

லகளவில் கருத்தடைக்கான பொறுப்பு 70 முதல் 75 சதவிகிதம் வரை பெண்கள் மீதே திணிக்கப்படுவதாக, ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியமும், உலக சுகாதார அமைப்பும் இதற்கான சிறப்பு ஆய்வின் அடிப்படையில் தெரிவிக்கின்றன. தற்போது, இதற்கொரு தீர்வாக ஆண்களுக்கான முதல் கருத்தடை மாத்திரையான YCT - 529 பக்க விளைவுகள் இல்லாமல் செயல்படுவதாக, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்தடை மாத்திரை
கருத்தடை மாத்திரை

இந்த கருத்தடை மருந்தை, நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகமும், YourChoice Therapeutics என்கிற உயிரி மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி இருக்கின்றன. எலிகள், ஆண் குரங்கு ஆகியவற்றின் மீது பரிசோதனை செய்து பார்த்தவர்கள், பின்னர் ஆரோக்கியமான சில ஆண் தன்னார்வலர்களுக்கு இந்த மாத்திரையை வழங்கி பரிசோதித்துள்ளனர். முடிவு பாசிட்டிவாக இருந்துள்ளது.

கருத்தடைக்காக பெண்கள் பயன்படுத்துகிற மாத்திரைகள் ஹார்மோன் அடங்கியவை. ஆண்களுக்கான இந்தக் கருத்தடை மாத்திரையோ ஹார்மோன் அல்லாதவை. பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் பக்கவிளைவாக தலைவலி, மார்பக வலி, எடை அதிகரிப்பு, மனநிலை மாற்றம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தலாம். ஆனால், YCT - 529 ஆண் ஹார்மோனான டெஸ்ட்டோஸ்டீரானில் (Testosterone) பாதிப்புகள் ஏற்படவில்லையாம். தவிர, மனநிலையில் மாற்றம், ரத்த அழுத்தம், உடல் எடை சார்ந்த பிரச்னைகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஆண்களுக்கு ஏற்படவில்லையாம்.

கருத்தடை

ஆண்களுக்கான இந்தக் கருத்தடை மாத்திரை, விந்தணு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் RAR-α என்கிற புரதத்தை தடை செய்து உயிரணுக்களின் உற்பத்தியை தற்காலிகமாக தடை செய்கிறது. இந்த மாத்திரையின் தாக்கம் வெறும் 4 முதல் 6 வாரங்கள் வரை மட்டுமே நீடிக்கும். இந்த கருத்தடை மாத்திரை உலகம் முழுக்க பயன்பாட்டுக்கு வந்தால், கருத்தடைப் பொறுப்பில் ஆணும் பகிர்ந்துகொள்ளலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்..!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Death cafe: டீ, காபி உடன் மரணம் பற்றிய உரையாடல் - இந்த டெத் கஃபே எதற்காக உள்ளது தெரியுமா?

பொதுவாக மரணத்தைப் பற்றி யாரும் அமர்ந்து பேச மாட்டார்கள். மரணம் என்ற வார்த்தையே ஒரு வித உணர்ச்சி தொடர்பான விஷயமாக தோன்றும். ஆனால் மரணத்தை பற்றி பேசுவதற்கென்று ஒரு இடம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: சட்டமன்றத்தில் ரம்மி விளையாடிய அமைச்சர்; எழுந்த கண்டனங்கள்... பறிக்கப்பட்ட இலாகா!

மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் மழை காலக்கூட்டத்தொடர் கடந்த வாரம் மும்பையில் நடந்தது. இக்கூட்டத்தொடரின் போது தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) கட்சியின் வேளாண்மை துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே தனது மொபைல் போ... மேலும் பார்க்க

Top News: BJP கூட்டணியிலிருந்து OPS விலகல் டு ம.பி-யில் 23000 பெண்கள் மாயம் வரை |ஜூலை 31 ரவுண்ட்அப்

ஜூலை 31 - டாப் செய்திகள்!* திருநெல்வேலி கவின்குமார் ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரின் காதலி, தாங்கள் இருவரும் உண்மையாகக் காதலித்ததாகவும், தங்களின் ரிலேஷன்ஷிப் பற்றி யாரும் தவறாகப் பேச வேண்டாம்... மேலும் பார்க்க

சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவைக்கும் வீடியோ!

சவுதி அரேபியாவின் தைஃப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் இன்று கோர விபத்து நடந்துள்ளது. '360 டிகிரி' எனப்படும் ராட்சத ராட்டினத்தின் மையத் தூண் இயக்கத்தின்போது திடீரென உடைந்து விழுந்ததில் 26 பேர... மேலும் பார்க்க

Kerala: கல்லறைகளில் இடம்பெறும் QR கோடு - என்ன காரணம் தெரியுமா?

கேரளாவில் உள்ள கல்லறை ஒன்றில், உலோகத்தால் ஆன QR கோடு உருவாக்கப்பட்டு, பதிக்கப்பட்டுள்ளது. அந்த கோட்டை யாராவது தங்களது செல்போனில் ஸ்கேன் செய்தால், அந்தக் கல்லறையில் இருக்கும் நபரின் வாழ்க்கை, நினைவுகள்... மேலும் பார்க்க

’2 பேருமே தத்தெடுக்கப்பட்டவர்கள் தான்’ - தந்தை சொத்தில் பங்கு கேட்ட பிள்ளைகள் ஷாக்!

சீனாவின் தியான்ஜின் நகரில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. இறந்த தந்தையின் ரூ.3.6 கோடி (மூன்று மில்லியன் யுவான்) சொத்துக்காக அண்ணன், தங்கை இருவருமே சண்டையிட்டுக் கொண்ட நிலையில் இவர்கள் இருவரும் அவரத... மேலும் பார்க்க