செய்திகள் :

மகாராஷ்டிரா: சட்டமன்றத்தில் ரம்மி விளையாடிய அமைச்சர்; எழுந்த கண்டனங்கள்... பறிக்கப்பட்ட இலாகா!

post image

மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் மழை காலக்கூட்டத்தொடர் கடந்த வாரம் மும்பையில் நடந்தது. இக்கூட்டத்தொடரின் போது தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) கட்சியின் வேளாண்மை துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே தனது மொபைல் போனில் ரம்மி விளையாடிக்கொண்டிருந்தார். இதனை சிலர் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவை சரத்பவார் கட்சியை சேர்ந்த ரோஹித் பவார் எம்.எல்.ஏ சமூக ஊடகத்தில் பகிர்ந்தார். அதோடு மாநில அரசை பிச்சைக்கார அரசு என்று மாணிக்ராவ் கோக்டே தெரிவித்தார். மேலும் விவசாயிகளை பிச்சைக்காரர்களோடு ஒப்பிட்டு பேசினார். இதனால் மாணிக்ராவ் கோக்டேயை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதோடு அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே மீது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

கோக்டே, பட்னாவிஸ்

அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக பட்னாவிஸ் தனது அதிருப்தியை தெரிவித்து இருந்தார். மேலும் இது போன்று மேற்கொண்டு தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுவீர்கள் என்று மாணிக்ராவ் கோக்டேயிக்கு முதல்வர் பட்னாவிஸும், துணை முதல்வர் அஜித்பவாரும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மாணிக்ராவின் இலாகாவை பறிக்கவேண்டும் என்ற கோரிக்கை தீவிரம் அடைந்தது. இதையடுத்து அமைச்சர் மாணிக்ராவிடமிருந்து வேளாண்துறையை முதல்வர் பறித்துள்ளார்.

அவருக்கு புதிதாக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை, சிறுபான்மை நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவாரிடம் கலந்து ஆலோசித்து மாணிக்ராவ் கோகடேயின் இலாகா மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கோபத்தில் இருப்பதால் வேளாண்துறை அமைச்சர் தத்தாத்ரேயாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வேறு எந்த இலாகாவும் மாற்றப்படவில்லை என்றும் முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இதே போன்று சிவசேனாவை சேர்ந்த சில அமைச்சர்களின் பதவியும் மாற்றியமைக்கப்பட இருந்தது. ஆனால் அதற்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சம்மதிக்கவில்லை. ஏக்நாத் ஷிண்டே அவசரமாக டெல்லி சென்று பா.ஜ.க முக்கிய தலைவர்களை சந்தித்து தனது அமைச்சர்களின் இலாகா பறிப்பை தடுத்து நிறுத்தினார். தேசியவாத காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் தனஞ்சே முண்டே முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பால் தனஞ்சே முண்டே மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்று கூறப்பட்டது.

Top News: BJP கூட்டணியிலிருந்து OPS விலகல் டு ம.பி-யில் 23000 பெண்கள் மாயம் வரை |ஜூலை 31 ரவுண்ட்அப்

ஜூலை 31 - டாப் செய்திகள்!* திருநெல்வேலி கவின்குமார் ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரின் காதலி, தாங்கள் இருவரும் உண்மையாகக் காதலித்ததாகவும், தங்களின் ரிலேஷன்ஷிப் பற்றி யாரும் தவறாகப் பேச வேண்டாம்... மேலும் பார்க்க

சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவைக்கும் வீடியோ!

சவுதி அரேபியாவின் தைஃப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் இன்று கோர விபத்து நடந்துள்ளது. '360 டிகிரி' எனப்படும் ராட்சத ராட்டினத்தின் மையத் தூண் இயக்கத்தின்போது திடீரென உடைந்து விழுந்ததில் 26 பேர... மேலும் பார்க்க

Kerala: கல்லறைகளில் இடம்பெறும் QR கோடு - என்ன காரணம் தெரியுமா?

கேரளாவில் உள்ள கல்லறை ஒன்றில், உலோகத்தால் ஆன QR கோடு உருவாக்கப்பட்டு, பதிக்கப்பட்டுள்ளது. அந்த கோட்டை யாராவது தங்களது செல்போனில் ஸ்கேன் செய்தால், அந்தக் கல்லறையில் இருக்கும் நபரின் வாழ்க்கை, நினைவுகள்... மேலும் பார்க்க

’2 பேருமே தத்தெடுக்கப்பட்டவர்கள் தான்’ - தந்தை சொத்தில் பங்கு கேட்ட பிள்ளைகள் ஷாக்!

சீனாவின் தியான்ஜின் நகரில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. இறந்த தந்தையின் ரூ.3.6 கோடி (மூன்று மில்லியன் யுவான்) சொத்துக்காக அண்ணன், தங்கை இருவருமே சண்டையிட்டுக் கொண்ட நிலையில் இவர்கள் இருவரும் அவரத... மேலும் பார்க்க

TCS: சிஇஓ முதல் நிர்வாக இயக்குநர் வரை - வைரலாகும் TCS நிறுவன அதிகாரிகளின் சம்பள பட்டியல்

உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டாடாவின் டிசிஎஸ் (TCS) நிறுவனம், தனது உலகளாவிய ஊழியர்களில் 2 சதவீதத்தைக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. டிசிஎஸ் (TC... மேலும் பார்க்க

இங்கிலாந்து: செல்லமாக நக்கிய வளர்ப்பு நாய்; ஒரு வாரத்தில் இறந்துபோன 83 வயது பெண்மணி; என்ன நடந்தது?

இங்கிலாந்தைச் சேர்ந்த 83 வயதான பெண்மணி ஒருவர் தனது வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் அவரின் காலை நாவினால் தீண்டியதை எடுத்து அவருக்குத் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். அந்தப் பெண்மணியின் காலில் ஏற்கனவே ... மேலும் பார்க்க