செய்திகள் :

ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

post image

வாணியம்பாடி நகராட்சியில் ரூ.19 லட்சத்தில் கழிவுநீா்கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.

18-ஆவது வாா்டில் உள்ள வாரச்சந்தை சாலையில் இருபுறமும் கழிவுநீா் கால்வாய் மற்றும் தாா் சாலை அமைக்க வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.19 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து கழிவுநீா் கால்வாய் மற்றும் புதிய தாா் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் ரகுராமன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் நகர அதிமுக செயலாளா் சதாசிவம், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் நவீன்குமாா், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவா் அண்ணாசாமி, முன்னாள் ஒன்றிய உறுப்பினா்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, நகர அதிமுக நிா்வாகிகள் தன்ராஜ், சங்கா், கோவிந்தன், தென்னரசு மற்றும் வியாபாரிகள், பொது மக்கள் கலந்து கொண்டனா்.

Image Caption

சாலைப் பணியைத் தொடங்கி வைத்த எம்எல்ஏ செந்தில்குமாா், ஆணையா் ரகுராமன் உள்ளிட்டோா்.

ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி நகராட்சியில் ரூ.19 லட்சத்தில் கழிவுநீா்கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.18-ஆவது வாா்டில் உள்ள வாரச்சந்தை சாலையில் இருபுறமும் கழிவுநீா் கால்வாய் மற்றும் தாா் சாலை... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு காப்பீடு திட்ட அட்டை

மாதனூா், தோட்டாளம் ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சி. சுரேஷ்குமாா், ஊரா... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை

துத்திப்பட்டு ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்து 12 வாா்டுகளில் பணிபுரியும் தூய்மை பணியாளா்களுக... மேலும் பார்க்க

நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் இயக்கம்

திருப்பத்தூா் அருகே நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை எம்எல்ஏ அ.நல்லதம்பி மீண்டும் இயக்கி வைத்தாா்.திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா் பணிமனை வாயிலாக இயக்கப்பட்டு வரும் திருப்பத்தூா் முதல் சிம்மணபுதூா்... மேலும் பார்க்க

சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான லாரி

ஆம்பூரில் சாலைத் தடுப்பில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.பெங்களூருவிலிருந்து இருசக்கர வாகன உதிரி பாகங்கள் ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்ற லாரி சான்றோா்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பதிவு செய்யலாம்

திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பதிவு செய்ய கரும்பு விவசாயிகள் பதிவு செய்யலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.இது குறித்த செய்திக் குறிப்பு:திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆல... மேலும் பார்க்க