செய்திகள் :

’2 பேருமே தத்தெடுக்கப்பட்டவர்கள் தான்’ - தந்தை சொத்தில் பங்கு கேட்ட பிள்ளைகள் ஷாக்!

post image

சீனாவின் தியான்ஜின் நகரில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. இறந்த தந்தையின் ரூ.3.6 கோடி (மூன்று மில்லியன் யுவான்) சொத்துக்காக அண்ணன், தங்கை இருவருமே சண்டையிட்டுக் கொண்ட நிலையில் இவர்கள் இருவரும் அவரது உண்மையான பிள்ளைகள் இல்லை என்பது நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியின்படி, குடும்ப தலைவரான சன், மார்ச் 2025-ல் காலமானார்.

அவர் இறப்பதற்கு முன்பாக, தனது ரூ.3.6 கோடி மதிப்புள்ள சொத்தின் உரிமையை முழுவதுமாக தன் மகனுக்கு மாற்றி எழுதியுள்ளார். மேலும் 1966-ல் தானும் தனது மனைவியும் தத்தெடுத்த தனது மகளுக்கு, மகன் "இழப்பீடு" வழங்க வேண்டும் என்றும் சன் அறிவுறுத்தியிருந்தார்.

சொத்து உரிமை

அவரது உயிலில், "எங்கள் மகள் தத்தெடுக்கப்பட்டவள் என்றாலும், நாங்கள் அவளை எங்கள் சொந்த மகளாகவே நடத்தினோம். எங்கள் முதுமைக் காலத்தில், எங்கள் மகன்தான் எங்களைக் கவனித்துக் கொண்டான்.

நாங்கள் வீட்டை அவனுக்குக் கொடுத்தோம். மகன் சகோதரிக்கு இழப்பீடு வழங்க சம்மதித்துள்ளான். நீங்கள் இருவரும் உண்மையான உடன்பிறப்புகளாகப் பழக வேண்டும் என நம்புகிறோம்," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த முடிவை எதிர்த்த தத்தெடுக்கப்பட்ட மகள், சொத்து மாற்று ஒப்பந்தத்தில் தந்தையின் கையெழுத்து மட்டுமே இருந்ததாகவும், தனது தாயின் பங்கும் சொத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டார். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் ஒரு வழக்காக வந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது, சகோதரி ஒரு புதிய ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். அதில் தனது சகோதரரின் வீட்டு பதிவு ஆவணங்களில் "தத்தெடுக்கப்பட்டவர்" என்று குறிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, அவரும் ஒரு உயிரியல் குழந்தை அல்ல என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த சொத்து 2007-ஆம் ஆண்டிலேயே சட்டப்பூர்வமாக மகனின் பெயருக்கு மாற்றப்பட்டுவிட்டதால், அது இனி பரம்பரை சொத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படாது என்று குறிப்பிட்டார். இரு உடன்பிறப்புகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரு தீர்வு கிடைத்திருக்கிறது.

அதன்படி, சொத்து சகோதரரிடமே இருக்கும் என்றும், அவர் தனது சகோதரிக்கு இழப்பீடாக ரூ.66 லட்சம் (5,50,000 யுவான்) வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

Top News: BJP கூட்டணியிலிருந்து OPS விலகல் டு ம.பி-யில் 23000 பெண்கள் மாயம் வரை |ஜூலை 31 ரவுண்ட்அப்

ஜூலை 31 - டாப் செய்திகள்!* திருநெல்வேலி கவின்குமார் ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரின் காதலி, தாங்கள் இருவரும் உண்மையாகக் காதலித்ததாகவும், தங்களின் ரிலேஷன்ஷிப் பற்றி யாரும் தவறாகப் பேச வேண்டாம்... மேலும் பார்க்க

சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவைக்கும் வீடியோ!

சவுதி அரேபியாவின் தைஃப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் இன்று கோர விபத்து நடந்துள்ளது. '360 டிகிரி' எனப்படும் ராட்சத ராட்டினத்தின் மையத் தூண் இயக்கத்தின்போது திடீரென உடைந்து விழுந்ததில் 26 பேர... மேலும் பார்க்க

Kerala: கல்லறைகளில் இடம்பெறும் QR கோடு - என்ன காரணம் தெரியுமா?

கேரளாவில் உள்ள கல்லறை ஒன்றில், உலோகத்தால் ஆன QR கோடு உருவாக்கப்பட்டு, பதிக்கப்பட்டுள்ளது. அந்த கோட்டை யாராவது தங்களது செல்போனில் ஸ்கேன் செய்தால், அந்தக் கல்லறையில் இருக்கும் நபரின் வாழ்க்கை, நினைவுகள்... மேலும் பார்க்க

TCS: சிஇஓ முதல் நிர்வாக இயக்குநர் வரை - வைரலாகும் TCS நிறுவன அதிகாரிகளின் சம்பள பட்டியல்

உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டாடாவின் டிசிஎஸ் (TCS) நிறுவனம், தனது உலகளாவிய ஊழியர்களில் 2 சதவீதத்தைக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. டிசிஎஸ் (TC... மேலும் பார்க்க

இங்கிலாந்து: செல்லமாக நக்கிய வளர்ப்பு நாய்; ஒரு வாரத்தில் இறந்துபோன 83 வயது பெண்மணி; என்ன நடந்தது?

இங்கிலாந்தைச் சேர்ந்த 83 வயதான பெண்மணி ஒருவர் தனது வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் அவரின் காலை நாவினால் தீண்டியதை எடுத்து அவருக்குத் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். அந்தப் பெண்மணியின் காலில் ஏற்கனவே ... மேலும் பார்க்க

மாலேகாவ் குண்டுவெடிப்பு: "நான் சன்னியாசியாக இருப்பதால்தான்" - விடுதலையான பிரக்யா சிங் பேச்சு

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகாவில் 2008ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து 6 பேர் உயிரிழந்தனர். மசூதி அருகில் நடந்த இக்குண்டு வெடிப்பில் 100 பேர் காயம் அடைந்தனர்.... மேலும் பார்க்க