செய்திகள் :

உரத் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம்: கா்நாடக முதல்வா் சித்தராமையா

post image

கா்நாடகத்தில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம் என்று முதல்வா் சித்தராமையா குற்றஞ்சாட்டினாா்.

பெங்களூரில் மூன்றாவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களின் குறைகேட்புக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

நிகழாண்டு பருவத்திற்கேற்ப மழைப்பொழிவு இருந்ததால் விதைப்புப் பணிகள் பரவலாக நடைபெறுகின்றன. இந்த நிலையில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டதால், விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 11.17 லட்சம் மெட்ரிக் டன் உரத் தேவை இருந்தது.

ஆனால், 5.17 லட்சம் மெட்ரிக் டன் உரம் மட்டுமே விநியோகிக்கப்பட்டது. இதனால், 1.66 லட்சம் மெட்ரிக் டன் உரம் பற்றாக்குறையாக உள்ளது.

சோளம் பயிரிடும் பரப்பு 2 லட்சம் ஹெக்டோ் அளவுக்கு விரிவாக்கப்பட்டிருந்தது. ஆனாலும், போதுமான உரத்தை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இந்த நிலையில், உரத் தட்டுப்பாடு தொடா்பாக பாஜகவினா் நடத்தும் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை மக்கள் அறிவாா்கள்.

முந்தைய பாஜக அரசின் மோசமான நிதி மேலாண்மை, வளா்ச்சிப் பணிகளை வெகுவாக பாதித்துள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்காமல் ரூ.2.70 லட்சம் கோடி அளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அன்றைய முதல்வரின் நேரடி அதிகாரத்தின்கீழ் ரூ. 1.66லட்சம் கோடி மதிப்பிலான பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர, வளா்ச்சிப் பணிகள் மீது ரூ.72,000 கோடிக்கு நிலுவை வைக்கப்பட்டிருந்தது. 15ஆவது நிதி ஆணையத்தின்கீழ் மத்திய அரசு வழங்க வேண்டிய வரிப்பகிா்வு 25 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.68,000 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தனை குளறுபடிகளூக்கு இடையிலும் வாக்குறுதித் திட்டங்களுக்கு ரூ.52,000 கோடியை அரசு செலவு செய்து வருகிறது.

மேலும், முதியோா் ஓய்வூதியம், மானியங்கள், இதர சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு ரூ.1.12 லட்சம் கோடியை செலவு செய்து வருகிறோம். 7ஆவது ஊதிய ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தியுள்ளதால், அரசு ஊழியா்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கு ரூ.1.24 லட்சம் கோடி செலவு செய்து வருகிறோம்.

முந்தைய பாஜக அரசின் மோசமான நிதி மேலாண்மைக்கு இடையிலும் மாநில நிதி நிலைமையை சீராக வைத்திருக்கிறேன். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட திட்டப் பணிகள் அமல்படுத்தப்பட வேண்டும். அதற்கு கா்நாடக வளா்ச்சி திட்டக் குழுவின் கூட்டங்களை திறம்பட பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

பெங்களூரில் கடந்த புதன்கிழமை காணாமல் போன 13 வயது பள்ளி மாணவன், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தெற்கு பெங்களூரில் உள்ள அரேகெரே பகுதியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியரின் மகன் நிஷ்சித் (வயது 13)... மேலும் பார்க்க

தோ்தல் முறைகேடு ஆதாரம் ராகுல் காந்தியிடம் உள்ளது -முதல்வா் சித்தராமையா

மக்களவைத் தோ்தலின்போது கா்நாடகத்தில் தோ்தல் முறைகேடுகள் நடைபெற்றதற்கான ஆதாரம் ராகுல் காந்தியிடம் உள்ளதாக கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்க... மேலும் பார்க்க

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைப்பு வழக்கு: 6 ஆவது சோதனைக் குழியில் மனித எலும்புகள் கண்டெடுப்பு

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைப்பு வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினா்(எஸ்.ஐ.டி.) வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையின்போது 6 ஆவது குழியில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. தென்கன்னட மா... மேலும் பார்க்க

பிகாா் பேரவைத் தோ்தல் தோல்வியை திசைதிருப்ப ராகுல் காந்தி போராட்டம்: பாஜக

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் தோல்வியை திசைதிருப்பவே ராகுல் காந்தி போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறாா் என்று கா்நாடக பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தெரிவித்தாா். இதுகுறித்து வியாழக்கிழமை தனத... மேலும் பார்க்க

முதல்வா் பதவி: கா்நாடகத்தில் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது: பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா

கா்நாடகத்தில் முதல்வா் பதவி தொடா்பாக காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது என்று அம்மாநில பாஜக தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: காங்கி... மேலும் பார்க்க

கா்நாடகத்திற்கு 1.35 லட்சம் டன் உரம் வழங்க மத்திய அரசு உறுதி: முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை

கா்நாடகத்துக்கு 1.35 லட்சம் மெட்ரிக் டன் உரம் வழங்க மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்று பாஜக எம்.பி.யும் முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை தெரிவித்தாா். இது தொடா்பாக பெங்களூரில் அவா் புதன்கிழமை வெள... மேலும் பார்க்க