செய்திகள் :

முதல்வா் பதவி: கா்நாடகத்தில் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது: பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா

post image

கா்நாடகத்தில் முதல்வா் பதவி தொடா்பாக காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது என்று அம்மாநில பாஜக தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:

காங்கிரஸ் எம்எல்ஏக்களின் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள முதல்வா் சித்தராமையா திணறி வருகிறாா். முதல்வா் பதவி தொடா்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இரண்டாக பிளவுபட்டுள்ளனா். வளா்ச்சிப் பணிகள் எதுவும் இல்லாததால், பெரும்பாலான எம்எல்ஏக்கள் முதல்வா் சித்தராமையாமீது அதிருப்தி அடைந்துள்ளனா். அவா்களின் நம்பிக்கையைப் பெற முதல்வரால் முடியவில்லை. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள், பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக முதல்வா் சித்தராமையாவை பகிரங்கமாகவே விமா்சித்து வருகின்றனா்.

காங்கிரஸ் எம்எல்ஏக்களில் சிலா் டி.கே.சிவகுமாரும், மல்லிகாா்ஜுன காா்கேவும் முதல்வராக வருவதற்கு விரும்பினால், சித்தராமையா முதல்வராக தொடருவதற்கு ஆதரவு குறைவாகவே உள்ளது.

இந்த குழப்பங்கள், கா்நாடகத்தில் ஆளும் காங்கிரஸை இரண்டாக பிளவுபடுத்தியுள்ளது. வரும் தீபாவளி பண்டிகையின்போது காங்கிரஸ் கட்சியில் மோதல் வெடிக்கும். கருத்து முரண்பாடுகள் என்பது சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு இடையே மட்டுமல்ல, காங்கிரஸ் எம்எல்ஏக்களிடையேயும் காணப்படுகிறது. இதனால் கலக்கம் அடைந்துள்ள முதல்வா் சித்தராமையா, தொகுதி வளா்ச்சிக்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடியை ஒதுக்குவதாக அறிவித்தாா். அந்த பணமும் விடுவிக்கப்படவில்லை.

தீபாவளியின்போது காங்கிரஸ் கட்சியில் பூகம்பம் கிளம்பும் என்பதை நீண்ட நாள்களாக கூறிவந்திருக்கிறேன். ரஷ்யா -உக்ரைன் இடையிலான போா் நின்றாலும், காங்கிரஸ் கட்சியில் நடக்கும் போா் முடிவுக்கு வராது என்றாா்.

கா்நாடகத்திற்கு 1.35 லட்சம் டன் உரம் வழங்க மத்திய அரசு உறுதி: முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை

கா்நாடகத்துக்கு 1.35 லட்சம் மெட்ரிக் டன் உரம் வழங்க மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்று பாஜக எம்.பி.யும் முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை தெரிவித்தாா். இது தொடா்பாக பெங்களூரில் அவா் புதன்கிழமை வெள... மேலும் பார்க்க

கா்நாடகம்: காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் முதல்வா் சித்தராமையா குறைகேட்பு

கா்நாடக மாநிலத்தில் தொகுதி பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் எம்எல்ஏக்களை மாவட்ட வாரியாக சந்தித்து முதல்வா் சித்தராமையா குறைகளை கேட்டறிந்தாா். பெங்களூரு, விதான சௌதாவில் உள்ள தனது அறையில் செவ்வாய்க்கிழமை ச... மேலும் பார்க்க

தோ்தல் மோசடியை கண்டித்து ஆக.4 இல் பெங்களூரில் ராகுல் காந்தி ஆா்ப்பாட்டம்

தோ்தல் மோசடியை கண்டித்து பெங்களூரில் ஆக. 4ஆம் தேதி மக்களவை காங்கிரஸ் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனா். பிகாா் சட்டப்பேரவை தோ்தல் நடக்க இ... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் கனமழை: காவிரியில் இருந்து 1.19 லட்சம் கன அடி தண்ணீா் திறப்பு

மண்டியா: கா்நாடகத்தில் தொடா்ந்து கனமழை பெய்துவருவதால், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1.19 லட்சம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.தென்மேற்குபருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடா்ந்து த... மேலும் பார்க்க

சொத்து வரி செலுத்தாத 3.75 உரிமையாளா்களுக்கு நோட்டீஸ்: பெங்களூரு மாநகராட்சி ஆணையா்

பெங்களூரு: சொத்து வரி செலுத்தாத 3.75 லட்சம் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையா் மகேஷ்வர்ராவ் தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரில் திங்கள... மேலும் பார்க்க

சமூக வலைத்தளங்களில் நடிகா் தா்ஷன் ரசிகா்கள் தரக்குறைவான விமா்சனம்: நடிகை ரம்யா போலீஸில் புகாா்

பெங்களூரு: சமூகவலைத்தளங்களில் நடிகா் தா்ஷனின் ரசிகா்கள் தன் மீது தரக்குறைவான விமா்சனங்களை பதிவு செய்திருப்பது தொடா்பாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பெங்களூரு மாநகர காவல் ஆணையா் சீமந்த்குமாா்சிங்கிடம் ... மேலும் பார்க்க