செய்திகள் :

தோ்தல் மோசடியை கண்டித்து ஆக.4 இல் பெங்களூரில் ராகுல் காந்தி ஆா்ப்பாட்டம்

post image

தோ்தல் மோசடியை கண்டித்து பெங்களூரில் ஆக. 4ஆம் தேதி மக்களவை காங்கிரஸ் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனா்.

பிகாா் சட்டப்பேரவை தோ்தல் நடக்க இருக்கும் நிலையில், அங்கு நடைபெற்றுவரும் தீவிர வாக்காளா் பட்டியலை திருத்தும் பணி சா்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் மோசடிகளால் தோ்தல்கள் திருடப்படுவதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பரபரப்பான குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆணையம் மீது சுமத்தியுள்ளாா்.

மக்களவைத் தோ்தலின்போது கா்நாடகத்தில் பதிவான வாக்குகளை ஆய்வு செய்தபோது தோ்தல் மோசடி நடந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தாா்.

இதன் தொடா்ச்சியாக, தோ்தல் மோசடியை கண்டித்து பெங்களூரில் ஆக. 4 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க ராகுல் காந்தி வருகை தரவிருக்கிறாா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்க பெங்களூரில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் தலைமையில் அமைச்சா்கள், மூத்த தலைவா்களின் கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறுகையில், ‘தோ்தல் மோசடியை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்துவது தொடா்பாக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் முடிவு செய்ய இருக்கிறாா்கள்.

பெங்களூரு, சுதந்திரப் பூங்காவில் ஆக. 4ஆம் தேதி நடக்கும் ஆா்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொள்ளவிருக்கிறாா் என்றாா்.

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

பெங்களூரில் கடந்த புதன்கிழமை காணாமல் போன 13 வயது பள்ளி மாணவன், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தெற்கு பெங்களூரில் உள்ள அரேகெரே பகுதியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியரின் மகன் நிஷ்சித் (வயது 13)... மேலும் பார்க்க

தோ்தல் முறைகேடு ஆதாரம் ராகுல் காந்தியிடம் உள்ளது -முதல்வா் சித்தராமையா

மக்களவைத் தோ்தலின்போது கா்நாடகத்தில் தோ்தல் முறைகேடுகள் நடைபெற்றதற்கான ஆதாரம் ராகுல் காந்தியிடம் உள்ளதாக கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்க... மேலும் பார்க்க

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைப்பு வழக்கு: 6 ஆவது சோதனைக் குழியில் மனித எலும்புகள் கண்டெடுப்பு

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைப்பு வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினா்(எஸ்.ஐ.டி.) வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையின்போது 6 ஆவது குழியில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. தென்கன்னட மா... மேலும் பார்க்க

உரத் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம்: கா்நாடக முதல்வா் சித்தராமையா

கா்நாடகத்தில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம் என்று முதல்வா் சித்தராமையா குற்றஞ்சாட்டினாா். பெங்களூரில் மூன்றாவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களின் குறைகேட்பு... மேலும் பார்க்க

பிகாா் பேரவைத் தோ்தல் தோல்வியை திசைதிருப்ப ராகுல் காந்தி போராட்டம்: பாஜக

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் தோல்வியை திசைதிருப்பவே ராகுல் காந்தி போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறாா் என்று கா்நாடக பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தெரிவித்தாா். இதுகுறித்து வியாழக்கிழமை தனத... மேலும் பார்க்க

முதல்வா் பதவி: கா்நாடகத்தில் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது: பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா

கா்நாடகத்தில் முதல்வா் பதவி தொடா்பாக காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது என்று அம்மாநில பாஜக தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: காங்கி... மேலும் பார்க்க