செய்திகள் :

`புதினுக்கு டெட்லைன்; நெதன்யாகுவுக்கு எச்சரிக்கை’ ; கோபத்தில் ட்ரம்ப் - நட்பில் விரிசலா?

post image

'இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்... அந்தப் போரை நிறுத்தினேன்... இந்தப் போரை நிறுத்தினேன்...' என்று கூறி வருகிற அமெரிக்க அதிபர் ட்ரம்பால், இன்னும் ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரை நிறுத்த முடியவில்லை.

ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த, அவர் எவ்வளவோ முட்டி மோதிப் பார்த்தும் ஒரு பலனும் இல்லை.

ரஷ்ய அதிபர் புதின் நேரடி பேச்சுவார்த்தைக்கே இன்னும் இறங்கி வரவில்லை.

ட்ரம்ப் எவ்வளவோ எச்சரித்து பார்த்தும் ஒரு பயனும் இல்லை. இப்போது அவர் கடைசி அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளார்.

அதாவது, புதின் போர் நிறுத்தத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால், ரஷ்யாவின் மீதும், ரஷ்யா உடன் வணிகம் செய்து வரும் நாடுகளின் மீதும் வரி விதிக்க உள்ளார் ட்ரம்ப்.

ட்ரம்ப் - புதின்
ட்ரம்ப் - புதின்

கடைசியாக புதினுடன் பேசிய போன்கால் குறித்து ட்ரம்ப், 'ஏமாற்றம்' என்று குறிப்பிட்டுள்ளார். 'என்னிடம் ஒன்று சொல்லிவிட்டு, அவர் இன்னொன்று செய்கிறார் என்றும் கூறியுள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த அவரும் என்னென்னவோ செய்து பார்க்கிறார்... ஆனால், புதின் ஒருப்படி கூட இறங்கி வருவதாக இல்லை.

அதனால், அவருக்கு ட்ரம்ப் ஆகஸ்ட் 8-ம் தேதியை டெட்லைனாக கொடுத்துள்ளார்.

அவர் அதற்குள் போரை நிறுத்தவில்லை என்றால், அவர் நாட்டின் மீது வரி விதிப்பு பாயும் என்று எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர்

இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாகவே பேசி வந்தார் ட்ரம்ப்.

ஆனால், தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரால், பாலஸ்தீனத்தில் இருந்து மக்கள் பசியால் வாடி வருகின்றனர். பலர் பசியால் இறந்தும் வருகிறார்கள். இந்தப் புகைப்படங்கள் உலகம் முழுக்க பரவி, எதிர்ப்புகளைக் கிளப்பி வருகின்றது.

இது ட்ரம்பிற்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

அதிபர் ட்ரம்ப் - பிரதமர் நெதன்யாகு
அதிபர் ட்ரம்ப் - பிரதமர் நெதன்யாகு

இது குறித்து, கடந்த வெள்ளிக்கிழமை, நெதன்யாகு உடன் போன்கால் பேசினார் ட்ரம்ப். அதுவும் ஏமாற்றம் அளிப்பதாகவே கூறியுள்ளார்.

தொடர்ந்து வரும் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரால், ட்ரம்பின் குடியரசு கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது என்று கூறப்படுகிறது.

சீக்கிரம் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு நெதன்யாகுவை எச்சரித்துள்ளார் ட்ரம்ப்.

ட்ரம்பிற்கு கசக்கும் நட்புகள்...

தற்சமயத்தில் ட்ரம்பிற்கும், நட்பிற்கும் சரிப்பட்டு வராத காலம் போல.

காரணம், புதின் மற்றும் நெதன்யாகு இருவருமே ட்ரம்பின் உற்ற நண்பர்கள் தான்.

ஆனால், ட்ரம்பின் பேச்சை கேட்கவோ, அவரது மிரட்டலுக்கு பணியவோ புதின் மற்றும் நெதன்யாகு தயாராக இல்லை.

இந்தப் போர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்பும் உறுதியாக இருக்கிறாராம்.

இதுவும் ட்ரம்பிற்கு நெருக்கடியாகத் தான் உள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் - மெலானியா
டொனால்ட் ட்ரம்ப் - மெலானியா

கொஞ்சம் யோசித்து பார்த்தால், ட்ரம்பின் நண்பர் இந்திய பிரதமர் மோடியும், ட்ரம்பின் வர்த்தக கண்டிஷன்களுக்கு ஒத்துவரவில்லை.

வட கொரியா கூட, தற்போது ட்ரம்பின் நட்பு வளையத்தில் அவ்வளவாக இல்லை.

ஆக, இப்போது ட்ரம்பிற்கு நட்புகளில் சறுக்கல் ஏற்பட்டு வருகிறது.

எது எப்படியோ, ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் நின்றால், அந்த நாடுகளின் மக்களுக்கும் நல்லது... உலக நாடுகளுக்குமே நல்லது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 முக்கிய செய்திகள்!

சௌதி அரேபியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் விழுந்ததில் 23 பேர் காயமடைந்தனர்.கேரளா பள்ளிகளில் ஒரு மாத விடுமுறையை வெயில் காலத்துக்கு பதில் மழைக் காலத்தில் அளிப்பது குறித்து மக்களிடம் கருத்த... மேலும் பார்க்க

"ஓ.பி.எஸ், முதல்வரை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்திருப்பார்" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை விளாங்குடியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். "அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ் வெளியேறிவிட்டாரே" என்ற கேள்விக்கு,"அவர் அதிமுக கூட்... மேலும் பார்க்க

"இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது" - ட்ரம்ப் கருத்தை ஏற்ற ராகுல் காந்தி; முரண்பட்டாரா சசி தரூர்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவை "இறந்த பொருளாதரம்" என விமர்சித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது எதிர்க்கட்சித் தலைவர் ரா... மேலும் பார்க்க

Trump: பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்கா; பாக்-இல் எண்ணெய் வளமா? ட்ரம்ப் கூறுவது உண்மையா?

'பாகிஸ்தானுடன் இப்போது தான் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். அதன் படி, பாகிஸ்தானில் எண்ணெய் வளங்களை மேம்படுத்துவதில், அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவ உள்ளது.இரு நாடுகளின் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஒரு எண... மேலும் பார்க்க

ட்ரம்ப் - பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் நெருக்கம்; குறைந்த வரி விகிதம்! - இதற்கான 4 காரணங்கள் என்ன?

இந்தியாவுக்கு 25 சதவிகித வரிப் போட்டு தள்ளியிருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு 19 சதவிகித வரியைத் தான் போட்டுள்ளார். மேலும், ட்ரம்பிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள நட்பு வலுத்து வரு... மேலும் பார்க்க

"கவின் தாயார் கண்ணீருக்கு பதில் இருக்கிறதா? திமுக ஆட்சிக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகியும்..." - சீமான்

திருநெல்வேலியில் ஜூலை 27-ம் தேதி கவின் என்பவர் சுர்ஜித் என்பவரால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.இதில், கொலையாளி சுர்ஜித் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் தாய் தந்தையான காவல்துறை அதிகாரிகள் சரவணன்,... மேலும் பார்க்க