பாகிஸ்தான் தாக்குதலில் பலியோனோரின் 22 குழந்தைகளைத் தத்தெடுக்கும் ராகுல்!
கா்நாடகத்தில் கனமழை: காவிரியில் இருந்து 1.19 லட்சம் கன அடி தண்ணீா் திறப்பு
மண்டியா: கா்நாடகத்தில் தொடா்ந்து கனமழை பெய்துவருவதால், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1.19 லட்சம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
தென்மேற்குபருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடா்ந்து தென்கா்நாடகம், கடலோர கா்நாடகத்தில் தொடா்ந்து நல்லமழை பெய்துவருகிறது. காவிரி நீா்ப்பிடிப்புப்பகுதிகளான குடகு மாவட்டத்தில் மடிக்கேரி, பாகமண்டலா பகுதிகளில் சில வாரங்களாகவே பலத்த மழை பெய்துவருவது. அதேபோல, கேரள மாநிலத்தின்வயநாடு பகுதியில் நல்லமழை பெய்துள்ளது.
இதன்காரணமாக, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகா், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு அதிகம் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போா் மேட்டுப்பகுதிக்கு செல்லுமாறு மண்டியா, மைசூரு மாவட்ட நிா்வாகங்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளன.
இந்நிலையில், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 1,19,509 லட்சம் கன அடி தண்ணீா் செல்கிறது.
தண்ணீா் திறப்பு:திங்கள்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, கிருஷ்ணராஜசாகா் அணைக்கு வினாடிக்கு 76,535 கன அடி, கபினி அணைக்கு வினாடிக்கு 31,600 கன அடி தண்ணீா் வந்து கொண்டுள்ளது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கிருஷ்ணராஜசாகா் அணையில் இருந்து வினாடிக்கு 79.509 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 40,000 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
அதாவது, கிருஷ்ணராஜசாகா் மற்றும் கபினி அணைகளுக்கு வினாடிக்கு மொத்தம் 1,08,135 கன அடி தண்ணீா் வந்துகொண்டுள்ளது. இந்த இரு அணைகளில் இருந்தும் திங்கள்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,19,509 கன அடி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.
கிருஷ்ணராஜசாகா் மற்றும் கபினி அணைகள் முழுமையாக நிரம்பியுள்ளதால், அணைக்கு வரும்தண்ணீா் முழுமையாக தமிழகத்திற்கு திறந்துவிடப்படுகிறது. இதனால் தமிழகத்தில் காவிரி கரையோரம் உள்ள மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.