செய்திகள் :

முடிவுக்கு வந்த தாய்லாந்து - கம்போடியா போர்; மலேசியா பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவு..

post image

எல்லைப் பிரச்னை காரணமாக, கம்போடியா - தாய்லாந்து போர் கடந்த 17-ம் தேதி தொடங்கியது.

5 நாள்கள் நடந்த இந்தப் போரில், கிட்டத்தட்ட 33 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

பிற நாடுகளின் குரல்

இந்தப் போர் தொடங்கியப்போதே, அது முற்றுப்பெற வேண்டும், நிறுத்தப்பட வேண்டும் என்று முதலாவதாக மற்றும் முக்கியமாக குரல் கொடுத்தார் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்.

அதன் பின், பல நாடுகள் அதை வலியுறுத்தியது. அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இரு நாட்டு தலைவர்களிடமும் போர் நிறுத்தம் குறித்து பேசினார். போர் நிறுத்தம் இல்லையென்றால், இரு நாடுகளுடனும் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என்று பயமுறுத்தினார்.

இதனால், ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைக்கு ஒத்துகொள்ளாத தாய்லாந்து வழிக்கு வந்தது. இரு நாடுகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது.

தாய்லாந்து - கம்போடியா கொடி
தாய்லாந்து - கம்போடியா கொடி

மலேசியாவில்...

இதையொட்டி, நேற்று மலேசியாவில் அமைதி பேச்சுவார்த்தை அன்வர் இப்ராஹிம் தலைமையில் நடந்தது.

இதில் கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் மற்றும் தாய்லாந்தின் சார்பில் அந்த நாட்டில் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய்யும் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தையின் இறுதியில், எந்த நிபந்தனையும் இல்லாமல், இரு நாட்டு தலைவர்களும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதன்படி, நேற்று நள்ளிரவு முதல் இரு நாடுகளிலும் போர் நிறுத்தம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

Kerala: கன்னியாஸ்திரிகள் கைது விவகாரம்: கொந்தளிக்கும் கட்சிகள்.. கேரள பாஜக தலைவர் சொல்வது என்ன?

கேரள மாநிலம் அங்கமாலி இடவூர் சபை உறுப்பினரான கன்னியாஸ்திரி பிரீதிமேரி, கண்ணூர் தலசேரி உதயகிரி சபை உறுப்பினரான வந்தனா பிரான்ஸிஸ் ஆகியோர் சத்திஸ்கர் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆள்கடத்தல் மற்று... மேலும் பார்க்க

`நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து' - இந்தியாவின் கிராண்ட் முஃப்தி; நிமிஷா வழக்கின் டைம்லைன்!

ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவிற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவின் 'கிராண்ட் முஃப்தி' என அழைக்கப்படும் காந்தபுரம் ஏபி அபூபக்கர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. யார் இந... மேலும் பார்க்க

``சத்தீஸ்கரில் கேரள கன்னியாஸ்திரிகள் கைது; வகுப்புவாத ஆபத்து..'' -மு.க.ஸ்டாலின் கண்டனம்

மனித கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டில் கேரளாவை சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் உள்ள துர்க் ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இதனால், நேற்று, கேரளா முழுவ... மேலும் பார்க்க

``முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அனுமதி அளித்ததால், நீதித்துறை மீது திமுக அரசுக்கு கோபம்'' - H.ராஜா

"இந்துக்களுக்கு எதிராக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை ஆளக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்து, அவர் நீண்ட ஆயுளோடு இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்" என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியுள்ளா... மேலும் பார்க்க

``வீணாக கடலில் கலக்கும் முல்லைப் பெரியாறு நீர்; தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?'' - ஆர்.பி உதயகுமார்

"முல்லைப் பெரியாறு அணையின் நீர் வீணாக கேரளக் கடலில் கலக்கிறது. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க