செய்திகள் :

கனடாவில் சிறிய விமானம் விபத்து: இந்திய இளைஞர் பலியானது உறுதி!

post image

கனடா நாட்டில் சிறிய ரக விமான விபத்தில், இந்திய இளைஞர் ஒருவர் பலியானது உறுதியாகியுள்ளதாக, அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

நியூ ஃபவுண்ட் லேண்ட் மாகாணத்தின், டீர் லேக் பகுதியில் கடந்த ஜூலை 26 ஆம் தேதியன்று, பிரிட்டனைச் சேர்ந்த கிஸிக் ஏரியல் சர்வே நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 2 பேரும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த விபத்தில் பலியானவர்களின் பெயரை வெளியிட அந்நிறுவனம் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டு, அரசு அதிகாரிகளின் விசாரணைக்குப் பின் பலியானவர்களின் விவரங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விபத்தில் பலியான 2 பேரில் ஒருவர், கௌதம் சந்தோஷ் எனும் இந்தியர் என்பது உறுதியாகியுள்ளதாக, டோரண்டோவிலுள்ள இந்தியத் தூதரகம் இன்று (ஜூலை 29) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில், பலியான 27 வயதான கௌதம் சந்தோஷ், கேரளத்தைச் சேர்ந்தவர் என்றும், கிஸிக் ஏரியல் சர்வேவின் டெல்டா நிறுவனத்தில் அவர் டெக்னிகல் எக்ஸ்பெர்டாக, பணியாற்றி வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த, ஜூலை 8 ஆம் தேதியன்று, கனடாவின் மனிடோபா மாகாணத்தில் ஏற்பட்ட சிறிய ரக விபத்தில், ஸ்ரீஹரி சுகேஷ் எனும் இந்தியர் உள்பட 2 மாணவ விமானிகள் பலியாகினர். இதில், பலியான ஸ்ரீஹரி சுகேஷும் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நைஜீரியா: பணம் கொடுத்தும் 35 பிணைக் கைதிகள் கொலை! கடத்தல் கும்பல் வெறிச் செயல்!

The Indian Embassy in Canada has confirmed the death of an Indian youth in a small plane crash.

பாலஸ்தீன் தனி நாடாக செப்டம்பரில் அங்கீகரிக்கப்படும்: இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சரிக்கை!

பாலஸ்தீன் தனி நாடாக அங்கீகரிக்கப்படும் என்று இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ. நா. அவையில் பாலஸ்தீன் தனி நாடாக செப்டம்பரில் அங்கீகரிக்கப்படும் என்று பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மெர்... மேலும் பார்க்க

ஆஸ்கர் வென்ற ஆவணப் படத்தில் பணியாற்றிய ஆர்வலர் சுட்டுக்கொலை!

மேற்கு கரைப் பகுதியில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளரால், பாலஸ்தீன ஆர்வலர் மற்றும் ஆசிரியரான ஒடேஹ் முஹம்மது ஹதாலின் சுட்டுக்கொல்லப்பட்டார். பாலஸ்தீன சமூகத்தின் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் ராணு... மேலும் பார்க்க

இம்ரான் கானின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

பாகிஸ்தானில் மே 9ல் நடைபெற்ற வன்முறை வழக்குகள் தொடர்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தாக்கல் செய்த ஜாமீன் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு ஒத்... மேலும் பார்க்க

நைஜீரியா: பணம் கொடுத்தும் 35 பிணைக் கைதிகள் கொலை! கடத்தல் கும்பல் வெறிச் செயல்!

நைஜீரியா நாட்டில், பணம் கொடுக்கப்பட்டபோதிலும், சுமார் 35 பிணைக் கைதிகளை கடத்தல்காரர்கள் சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஸம்ஃபரா மாநிலத்தின், பங்கா எனும் கிராமத்தில் இருந்து, கடந்த மார... மேலும் பார்க்க

சொந்தமாக பணமோ விமான நிலையமோ இல்லை..ஆனால் கோடீஸ்வர நாடு! எது தெரியுமா?

சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்ட்ரியா நாடுகளை தனது அரணாகக் கொண்டிருக்கும் நாடு லிச்டென்ஸ்டெய்ன். ஐரோப்பியாவின் மிகப் பணக்கார நாடாக மின்னிக் கொண்டிருக்கிறது இது.இதன் மிகச் சிறிய அளவு மட்டுமல்ல, இது பல்வேறு... மேலும் பார்க்க

மெஸ்ஸி.. மெஸ்ஸி..! இந்த முறை கோல்டு பிளே ‘கிஸ் கேம்’மில்..!

அமெரிக்காவில் நடைபெற்ற கோல்டு பிளே இசை நிகழ்ச்சியில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது மனைவி அன்டோனெலா மற்றும் குழந்தைகளுடன் கலந்துகொண்டார்.உலகில் பல்வேறு நாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள், வ... மேலும் பார்க்க