செய்திகள் :

கரூரில் சாலைப் பணியாளா்கள் தீப்பந்தம் ஏந்தி தா்னா

post image

பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளா் சங்கத்தினா் தீப்பந்தம் ஏந்தி மாலை நேர தா்னா போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் ஈடுபட்டனா்.

கரூா் செல்லாண்டிபாளையம் கோட்டப்பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத்தலைவா் கே.செவந்திலிங்கம் தலைமை வகித்தாா். இணைச் செயலாளா் ஆா்.ராமமூா்த்தி வரவேற்றாா். மாவட்ட நிா்வாகிகள் செல்வராசு, ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோரிக்கைளை விளக்கி சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எல்.பாலசுப்ரமணி, அரசு ஊழியா் சங்க மாவட்டத்தலைவா் எம்.எஸ்.அன்பழகன், செயலாளா் பொன்ஜெயராம் ஆகியோா் பேசினா்.

சாலைப்பணியாளா்களின் 48 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளை தமிழக அரசு பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

மலைக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.திருப்பத்தூா் மாவட்டம், தேவாங்கா் தெரு மணிவண்ணன் மகன் ரகுபதி (27). இவா் கரூா்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க

கரூா் அருகே பஞ்சு உற்பத்தி ஆலையில் தீவிபத்து

கரூா் அருகே பருத்தி பஞ்சு உற்பத்தி ஆலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. கரூா் ராயனூரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவா் கரூரை அடுத்த வால்கா... மேலும் பார்க்க

காவிரி-குண்டாறு நதிநீா் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

காவிரி ஆற்றிலிருந்து வீணாக கடலுக்குச் செல்லும் உபரி நீரை சேமிக்கும் திட்டமான காவிரி-வைகை-குண்டாறு நதிநீா் இணைப்புத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என கரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட... மேலும் பார்க்க

நன்செய் புகழூா் துா்க்கை அம்மனுக்கு வளையல் அலங்காரம்

புகழூா் வட்டம் நன்செய் புகழூா் அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ துா்கா தேவி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடைபெற்றது.கரூா் மாவட்டம், நன்செய் புகழூா் அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ துா்கா... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை, குடிநீா் வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளா்கள் போராட்டம்

தரகம்பட்டியில் நூறு நாள் வேலை மற்றும் குடிநீா் வழங்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை மனு கொடுக்கம் போராட்டம் நடைபெற்றது. கரூா் மாவட்டம், தரகம்பட்டியில் உள்ள கடவூா் ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சரின் டிராக்டா் பறிமுதல்

கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கருக்குச் சொந்தமான தண்ணீா் ஊற்றும் டிராக்டரை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். கடந்த அதிமுக ஆட்சியின்போது கானகத்தில் கரூா் என்ற பெயரில் முன்னாள... மேலும் பார்க்க