செய்திகள் :

கிராமப்புற சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு: நிதிஷ் குமார் அறிவிப்பு!

post image

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு நெருங்கியுள்ள நிலையில், கிராமப்புற சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தியுள்ளதாக அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நிதிஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

2025இல் அரசு அமைக்கப்பட்டதிலிருந்து சுகாதார சேவைகளை மேம்படுத்த நாங்கள் விரிவாகப் பணியாற்றி வருகிறோம்.

அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) மற்றும் மம்தா பணியாளர்கள் கிராமப்புறங்களில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்கப் பங்கைக் கெண்டுள்ளனர்.

ஆஷா பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ. 1,000-க்கு பதிலாக ரூ. 3,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

மம்தா ஊழியர்களுக்கு பிரசவத்திற்கு ரூ.300 ஊக்கத்தொகை வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 600 அதிகரிக்கும்.

முதல்வரின் அறிவிப்புக்குப் பதிலளித்த ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், மாநில சுகாதார அமைச்சராகத் தனது 17 மாத பதவிக்காலத்தில்ஆஷா மற்றும் மம்தா தொழிலாளர்களுக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்கும் செயல்முறையைத் தொடங்கியதாகக் கூறினார்.

இந்த மேம்படுத்தப்பட்ட ஊக்கத்தொகை அவர்களின் மன உறுதியை அதிகரிக்கும் மற்றும் கிராமப்புறங்களில் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்

நமது நிருபர் பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் முழு உண்மையையும் மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தியது.இது தொடர்பாக மாநிலங்களவையில் இரண்டாம் நாளாக புதன்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகம் தொடர்புடைய பிரச்னைகள் மற்றும் கேள்விகளை தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பினர். அவற்றின் விவரம் வருமாறு:-மக்களவையில்...எம்.பி. தொகுதி நிதி ரூ. 5 கோடி; ஆனா... மேலும் பார்க்க

ஆகஸ்டில் 46 டிஎம்சி காவிரி நீர்: உறுதிப்படுத்த தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர்உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் ஆகஸ்ட் மாதத்துக்குரிய 45.95 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆ... மேலும் பார்க்க

குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விசாரிக்க கிரிக்கெட் மைதானம்தான் தேவைப்படும்: செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

நமது நிருபர்முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளில் 2,000-க்கும் மேற்பட்டவர்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்த்ததற்காக தமிழக அரசை உச்சநீதிமன்றம் புதன்கிழமை கடிந்து கொண்டது.மேலும், ... மேலும் பார்க்க

தில்லியில் எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழா: ஆக. 7- இல் பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழாவை மத்திய அரசுடன் இணைந்து தில்லியில் இரு நாள்கள் கொண்டாடப்பட இருப்பதாகவும், இந்த விழாவை ஆக. 7-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளதாகவும... மேலும் பார்க்க

புலந்த்ஷஹா் வன்முறையில் 38 போ் குற்றவாளிகள்: உ.பி. நீதிமன்றம் தீா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷஹா் மாவட்ட வன்முறை வழக்கில், 38 போ் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.கடந்த 2018-ஆம் ஆண்டு புலந்த்ஷஹரில் உள்ள சயானா பகுதியில், பசு வதைக்கப்பட்டு கொ... மேலும் பார்க்க