செய்திகள் :

ஆகஸ்டில் 46 டிஎம்சி காவிரி நீர்: உறுதிப்படுத்த தமிழகம் வலியுறுத்தல்

post image

நமது நிருபர்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் ஆகஸ்ட் மாதத்துக்குரிய 45.95 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய (சி.டபிள்யு.எம்.ஏ.) கூட்டத்தில் தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

கடந்த ஜூன் 26-ஆம் தேதி நடைபெற்ற சி.டபிள்யு.எம்.ஏ. 41- ஆவது கூட்டத்தின்போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்குரிய ஜூலை மாதத்துக்கான நீர் அளவை (31.24 டிஎம்சி) கர்நாடகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழகத்தின் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதியில் பருவமழை தொடர்ந்து பெய்துவந்ததால் காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

இதனிடையே, வழக்கமாக நடைபெறும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 119-ஆவது கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 42-ஆவது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் தில்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் புதன்கிழமை நேரடியாகவும், காணொலி மூலமாகவும் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத் துறைச் செயலரும், குழுவின் உறுப்பினருமான ஜெ.ஜெயகாந்தன் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் கலந்துகொண்டார்.

அவர் கூட்டத்தின்போது கூறியதாவது: ஜூலை 30-ஆம் தேதி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு அதன் முழுக் கொள்ளளவான 93.470 டிஎம்சி ஆக உள்ளது. கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து அதிகமான உபரிநீர் வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணைக்கு இன்று (புதன்கிழமை) காலை நீர்வரத்து விநாடிக்கு 1,12,555 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.

ஆகவே, நிலைமைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து கணிசமான அளவு தொடர்ந்துவருவதாலும், தமிழகத்துக்கு நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட வேண்டிய நீர் அளவான 45.95 டிஎம்சி நீரை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பிலிகுண்டுலுவில் கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆணையத்தைக் கேட்டுக்கொண்டார். இதை ஆணையம் கவனத்தில் எடுத்துக்கொண்டது.

இக்கூட்டத்தில் காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர். சுப்பிரமணியமும் காணொலி மூலம் கலந்துகொண்டார். கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய பிற மாநிலங்களில் இருந்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

அமலாக்கத் துறை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் ஏவல் படையாகச் செயல்படுவதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்... மேலும் பார்க்க

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

குவைத் நாட்டில் உயிரிழந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த தொழிலாளியின் உடல் 45 நாள்கள் கழித்து தாயகம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தின், பந்த்காரோ கிராமத்தைச் சேர்... மேலும் பார்க்க

மீண்டும் ஏர் இந்தியா! தில்லி - லண்டன் விமானம் ரத்து! ஏன்?

தில்லியில் இருந்து லண்டன் புறப்பட தயாரான ஏர் இந்தியா விமானத்தின் பயணம், தொழில்நுட்பக் கோளாறினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தில்லியில் இருந்து லண்டன் நகரத்துக்குச் செல்ல, ஏர் இந்த... மேலும் பார்க்க

அந்தமான் நிகோபார் தீவில் முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை! முன்னாள் எம்.பி.யின் மோசடி அம்பலம்?

அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடியின் காரணமாக முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடத்தப்பட்டதாக அம்மாநி... மேலும் பார்க்க

நட்பினால் நஷ்டமா? மோடி - டிரம்ப் உறவு குறித்த கணிப்பு உண்மையானது!

உலகளவில் மிக முக்கிய மற்றும் பிரபலமான தலைவராக இருந்துவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையேயான வலுவான நட்புறவை உலக மக்களும் சரி, தலைவர்களும் எப்போதும் மெச்சி ... மேலும் பார்க்க

வருமான வரிக் கணக்கு தாக்கல்: கால அவகாசம் நீட்டிக்கப்படலாம்! காரணம் இதுதான்!!

தனிநபர் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், அதற்கு இன்னமும் 45 நாள்களே இருக்கும் நிலையில், கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படலாம் எ... மேலும் பார்க்க