செய்திகள் :

மீண்டும் ஏர் இந்தியா! தில்லி - லண்டன் விமானம் ரத்து! ஏன்?

post image

தில்லியில் இருந்து லண்டன் புறப்பட தயாரான ஏர் இந்தியா விமானத்தின் பயணம், தொழில்நுட்பக் கோளாறினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தில்லியில் இருந்து லண்டன் நகரத்துக்குச் செல்ல, ஏர் இந்தியா விமானம், இன்று (ஜூலை 31) புறப்படத் தயாரானது. அப்போது, விமானிகள் மேற்கொண்ட வழக்கமான சோதனைகளின் மூலம், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கக் கூடும் எனும் சந்தேகத்தில் இந்தப் பயணத்தை அவர்கள் ரத்து செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த விமானத்தில் இருந்து, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்தப் பயணத்தில் பறக்கத் தயாரானது, போயிங் 787-9 விமானம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, வெளியேற்றப்பட்ட பயணிகள் அனைவருக்கும் மற்றொரு விமானம் மூலம் லண்டன் செல்வதற்கான நடவடிக்கைகள் ஏர் இந்தியா நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பயணிகளின் எண்ணிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

முன்னதாக, ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் 260 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பிலிப்பின்ஸ் அதிபர் ஆக.4-ல் இந்தியா வருகை!

It is reported that the flight of an Air India flight from Delhi to London has been canceled due to a technical glitch.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பிறகு காங்கிரஸ் இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிர்வாகிகள் திட்டமிட்ட முறையில் குறிவைக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல... மேலும் பார்க்க

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பதிவு அஞ்சல் முறை, விரைவு அஞ்சலுடன் இணைக்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை செப்.1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.இந்திய அஞ்சல் சேவையின் செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் வி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரைக்கான யோசனைகளைப் பகிருங்கள்! - பிரதமர் மோடி அழைப்பு

சுதந்திர தின விழா வருவதையொட்டி, பிரதமரின் உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்த யோசனைகளைப் பகிருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி 79-வது ஆண்டு ச... மேலும் பார்க்க

வாக்குகளைத் தேர்தல் ஆணையம் திருடுவது தேசத்துரோகம்; 100% ஆதாரங்கள் உள்ளன! - ராகுல்

மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான 100% ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக ப... மேலும் பார்க்க

நுரையீரல் புற்றுநோய் நாள் இன்று! தில்லியில் இருந்தால் சிகரெட்டே பிடிக்க வேண்டாம்!!

புது தில்லி: நுரையீரல் புற்றுநோய் நாள் ஆகஸ்ட் ஒன்றாம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய நாளில் நுரையீரல் புற்றுநோய் வராமல் தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும்.இந்த நாளில், ஆசிய... மேலும் பார்க்க

செப். 9 குடியரசு துணைத் தலைவர் தேர்தல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 2... மேலும் பார்க்க