ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
நுரையீரல் புற்றுநோய் நாள் இன்று! தில்லியில் இருந்தால் சிகரெட்டே பிடிக்க வேண்டாம்!!
புது தில்லி: நுரையீரல் புற்றுநோய் நாள் ஆகஸ்ட் ஒன்றாம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய நாளில் நுரையீரல் புற்றுநோய் வராமல் தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும்.
இந்த நாளில், ஆசிய பசிபிக் நுரையீரல் புற்றுநோய் கொள்கை அமைப்பானது வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையானது, அச்சமூட்டுவதாக உள்ளது. புது தில்லி முழுக்க நுரையீரல் புற்றுநோய் பாதித்தவர்களுக்கு, காற்று மாசுபாடு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது என்கிறார்கள்.
தில்லியில் காற்று மாசுபாடு என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில், இங்கு நுரையீரல் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் இந்நோய் வருவதையும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.