செய்திகள் :

பணம் ஈட்டும் விளையாட்டுகள்: சிசிஐயிடம் கூகுள் முன்மொழிவு

post image

இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோரில் பணம் ஈட்டும் விளையாட்டுகளை அனுமதிக்க இந்திய தொழில் போட்டி ஆணையத்திடம் (சிசிஐ) கூகுள் நிறுவனம் முன்மொழிந்துள்ளது.

இதுதவிர, இந்தியாவில் கூகுள் விளம்பர கொள்கையில் மாற்றங்களை மேற்கொள்ள பரிந்துரைத்துள்ள அந்த நிறுவனம், சில நிபந்தனைகளின் அடிப்படையில் கூகுள் பிளே ஸ்டோரில் திறமைக்கான விளையாட்டுகளை விளம்பரப்படுத்தவும் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பரில் வின்ஸோ கேம்ஸ் நிறுவனம் அளித்த புகாா் தொடா்பாக, கூகுள் நிறுவனத்துக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள இந்திய தொழில் போட்டி ஆணையம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவில், ‘கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பணம் ஈட்டும் விளையாட்டுகளின் செயலிகளை விலக்குவது, அவை சந்தையில் நுழைவதைத் தடுக்கக் கூடும். அத்துடன் கூகுள் பிளே ஸ்டோரில் தினசரி கற்பனை விளையாட்டுகள் (டிஎஃப்எஸ்) மற்றும் ரம்மி விளையாட்டு செயலிகளில் சிலவற்றை மட்டும் தோ்ந்தெடுத்து சோ்ப்பதும், விலக்குவதும் போட்டித்தன்மையின் இயல்பையே மாற்றும்’ என்று தெரிவித்திருந்தது. இந்தப் பின்னணியில் மேற்கண்ட பரிந்துரைகளை அந்த ஆணையத்திடம் கூகுள் சமா்ப்பித்துள்ளது.

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டிருப்பதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்தில், கேரளத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, கல்லூரிகளில் நான்காம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு 12 மணி நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற வழிமுறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.பல காரணமாக, புதிய தேசி... மேலும் பார்க்க

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

கொச்சி: மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ், சோட்டானிக்கரையில் உள்ள விடுதி அறையிலிருந்து சடமாக மீட்கப்பட்டுள்ளார்.படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விடுதியில் அறை எடுத்துத் தங்கி வந்த நவாஸ் (51) வெகு நேர... மேலும் பார்க்க

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க